Kerala Lottery: குப்பையில் வீசப்பட்ட ரூ.1 கோடி பரிசு லாட்டரி.. கடவுள் போல வந்த சகோதரர்! கேரள மூதாட்டிக்கு குபேர யோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.1 கோடி பரிசு அடித்த லாட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசி விட்டு, வீட்டுக்கு வந்த மூதாட்டிக்கு வீட்டுக்கு வந்த பிறகே உண்மை தெரிந்து இருக்கிறது. பரிசு விழுந்தது தெரியாமல், குப்பையில் வீசி விட்டேனே என பதறிய அந்த மூதாட்டி இரவோடு இரவாக குப்பை தொட்டியை சல்லடை போட்டுள்ளார். சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்களுடன் கடைசியில் அவருக்கு அந்த டிக்கெட் கிடைத்துள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. அங்கு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் மட்டுமின்றி தினம் தோறும் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.50 ஆகும்.

சினிமாவை மிஞ்சும் சம்பவம்
கேரளாவை சேர்ந்த லாட்டரி பிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்கி தங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா? என ஏக்கத்துடன் காத்திருப்பதை பார்க்க முடிகிறது.. லாட்டரி டிக்கெட்டுகளில் பரிசு விழுந்த கதையை வைத்து தனி சினிமாவே எடுக்கலாம் என சொல்லும் அளவிற்கு சில சுவாரசிய நிகழ்வுகளும் கேரளாவில் நடைபெறுவது வழக்கம். அப்படியான ஒரு நிகழ்வுதான் கேரளாவில் ஒரு வயதான தம்பதிக்கு நடந்துள்ளது.
குப்பையோடு குப்பையாக போயிருக்கும்
கொஞ்சம் விட்டால் ஒரு கோடியை குப்பையோடு குப்பையாக அனுப்பியிருக்கும் நிலையே ஏற்பட்டு இருக்குமாம்.. ஜஸ்ட் மிஸ்சில் ஒரு கோடி பரிசை வென்று கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்கள் அந்த தம்பதி.. அப்படி என்னதான் நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அச்சம்மா குஞ்சு. தளாவடி பஞ்சாயத்து பகுதியில் பெட்டிக்கடை வைத்து இருக்கும் இவர் காருண்யா லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.
அம்பலப்புழா - திருவல்லா மாநில நெடுஞ்சாலை அருகே கடை வைத்துள்ள அச்சம்மா, அருகில் லாட்டரி கடை நடத்தி வந்த ஜார்ஜ் குட்டி என்பவரின் கடையில் டிக்கெட்டுகளை வாங்கினார். கடந்த வியாழக்கிழமை காருண்யா டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் பரிசு நமக்கு விழுந்து இருக்கிறதா? என்று அச்சம்மா பார்த்துள்ளார்.
கடவுளாக வந்த சகோதரர்
இரண்டு டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ரூ.5 ஆயிரம் பரிசு விழுந்து இருந்தது. இதனால் ஆறுதல் அடைந்த அச்சம்மா, கையில் இருந்த மற்றொரு டிக்கெட்டை குப்பையில் வீசிவிட்டார். பெட்டிக்கடையில் இருந்த குப்பை தொட்டியில் வீசிவிட்டு வீட்டுக்கு வந்த அச்சம்மாவுக்கு அவரது சகோதரர் போன் செய்துள்ளார்.
கடவுளாக வந்த அவரால் தான் இந்த பரிசுத் தொகையை பெற முடிந்தது. போன் செய்த அவர், 'நீ வாங்கிய டிக்கெட் ஒன்றிற்குதான் முதல் பரிசு அடித்துள்ளது' என்று கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அச்சம்மா.. அய்யய்யோ அதை குப்பையில் வீசி விட்டேனே என்று பதறியுள்ளார். உடனடியாக அச்சம்மாவும் அவரது சகோதரரும் இரவோடு இரவாக பெட்டிக்கடைக்கு சென்று அங்கிருந்த குப்பைத்தொட்டியை சல்லடை போட்டு தேடியிருக்கிறார்கள்.
கவுண்டமணி எப்படி பதறுவாரோ?
ராக்காயி கோயில் படத்தில் லாட்டரியில் பரிசு அடித்த டிக்கெட்டை தொலைத்துவிட்டு கவுண்டமணி எப்படி பதறுவாரோ.. அதைவிட ஒரு படி மேலே என சொல்லும் அளவிற்கு இருவரும் பதற்றத்துடன் குப்பை தொட்டியை மொத்தமாக கொட்டி, அதில் டிக்கெட்டை தேடியுள்ளனர். ஒருவழியாக டிக்கெட் கையில் கிடைத்துள்ளது. அப்போதுதான் இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இதையடுத்து கிடைத்த அந்த டிக்கெட்டை லாட்டரி அலுவலகத்திடம் கொடுத்து பரிசு வாங்க தயாராகி வருகிறார் அச்சம்மா.. கொஞ்சம் அசந்து இருந்தால் ஒரு கோடியை தவற விட்டு இருப்பாரே.. இப்படியா அசால்ட்டாக இருப்பது கேரள சேட்டன்களும் அவருக்கு அட்வைஸ் சொல்லி வருகிறார்களாம்.. கடவுள் கொடுக்கனும்னு நினைச்சிட்டா.. அதை யாராலும் தடுக்க முடியாது என்பது இதுதான் போல என்று லாட்டரி பிரியர்களும் இந்த நிகழ்வை பார்த்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்..
-
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
அரசு வேலை கனவு.. ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த இன்ப அதிர்ச்சி.. மாநிலமே கொண்டாடுது -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி














Click it and Unblock the Notifications