விளம்பரம் தேடுவோருக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியாது.. கேரள அமைச்சர் திட்டவட்டம்
Recommended Video
திருவனந்தபுரம்: விளம்பரம் தேடி கொள்வதற்காகவே சபரிமலைக்கு வரும் பெண்கள் ஆர்வலர்களுக்கு கேரள அரசு எந்தவித பாதுகாப்பையும் வழங்காது என தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. காலம் காலமாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதினரும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை கடந்த ஆண்டு அளித்தது.

7 பேர் கொண்ட அமர்வு
இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவின் நாயர் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த நிலையில் அதன் மீதான தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கியது. அதில் மறுசீராய்வு மனுவை 7 பேர் கொண்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

பெண்கள்
இந்த நிலையில் சபரிமலைக்கு பெண்களுக்கு அனுமதி என்ற உத்தரவு தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் இன்று மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனால் இன்றைய தினம் பெண்கள் அதிகளவில் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்தி தேசாய்
அதோடு புனேவை சேர்ந்த பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் இன்று சபரிமலைக்கு செல்வதாக அறிவித்துள்ளார். இங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலைக்கு ஏராளமான பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களிடம் உண்மையான கள நிலவரத்தை கூறி அவர்களை வரவிடாமல் தடுக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.

பாதுகாப்பு இல்லை
இதுகுறித்து அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் கடந்த ஆண்டை போல் இந்த முறையும் சபரிமலைக்கு வர முயற்சிக்கும் பெண்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்கும் என்பது உண்மை இல்லை. சுய விளம்பரத்துக்காக சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பெண்கள் அதற்கான நீதிமன்ற உத்தரவை பெற வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications