கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் கேரளாவில் தலைதூக்கியுள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 40 வயது மதிக்கத்தக்க நபருக்குத் திடீரென நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் சூழலில், மாநிலத்தில் தீவிர கண்காணிப்புப் பணிகளும் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலுக்குப் பிறகு ஒவ்வொரு வைரஸ் பாதிப்பையும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை நாம் இழந்திருந்தோம். இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவுகிறது. இதனால் மாநிலத்தில் உச்சக்கட்ட அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Kerala Nipah Virus outbreak Kerala Nipah Virus

கேரளா

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது முதற்கட்டச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று வெளியான இந்தத் தகவல், அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தற்போது அந்த நபர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த மாதிரிகள் முதற்கட்ட சோதனையில் 'பாசிட்டிவ்' என்று வந்துள்ள போதிலும், வைரலாஜி ஆய்வகத்திலிருந்து இறுதிக்கட்ட முடிவுக்கு அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

முன்னெச்சரிக்கை

இருப்பினும், முதற்கட்டச் சோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளதால் கேரளச் சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தவர்கள் யார் யார் என்பதை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடையாளம் காணப்பட்ட நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவாமல் தடுக்கத் தேவையான பகுதிகளில் தனிமை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

நிபா வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும். இது முதன்மையாகப் பழம் தின்னும் வௌவால்கள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சில், சிறுநீர் அல்லது அவை கடித்த பழங்களை மனிதர்கள் உட்கொள்ளும் போது இந்த வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நெருக்கமான தொடர்பு மூலம் இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவக்கூடும்.

நிபா வைரஸ்

நிபா வைரஸ் ஏற்படுத்தும் உயிரிழப்புகள் மிக அதிகமாகும். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதுவரை நிபா வைரஸிற்குத் தடுப்பூசிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், இதற்கு என்று பிரத்தியேகமான மருந்துகள் கிடையாது. நோயாளியின் அறிகுறிகளுக்கு ஏற்பவே சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

கேரளா, குறிப்பாக கோழிக்கோடு மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக நிபா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. 2018, 2019, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் கேரளாவில் மொத்தம் 31 பேருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டது. இதில் துரதிர்ஷ்டவசமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா

நிபா வைரஸ் ஆபத்தானது என்றாலும், கேரளா ஏற்கனவே நான்கு முறை இந்தத் தொற்றைக் கையாண்ட அனுபவம் கொண்டது. இதனால் அம்மாநிலத்தில் மிகவும் வலுவான கண்காணிப்பு மற்றும் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள வழக்கும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+