வைகாசி மாத பூஜைகளுக்காக மே 14ல் சபரிமலை கோவில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைகளுக்காக வரும் 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் : வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. 5 நாட்கள் பூஜை நடைபெறும் எனவும் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கொரோனா காலமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஐப்பசி மாதம் தொடங்கி கடந்த மாதம் வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 5,000 பக்தர்கள் தினசரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து, இன்று முதல் வரும் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த 9 நாட்களும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதி இல்லை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை கோயில் நடை திறந்து பூஜைகள் நடக்கும். ஆனால் இந்த நாட்களில் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications