கழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா
கேரளாவை சீரியல் கொலைகாரிகள் உலுக்கி எடுத்து உள்ளனர்
Recommended Video
திருவனந்தபுரம்: கொடூரக் கொலைகளை சர்வ சாதாரணமாக செய்து விட்டு கேஷுவலாக இருக்கிறார் ஜோலி.. ஒட்டுமொத்த கேரளாவே மிரண்டு போய் உள்ளது. ஆனால் இதெல்லாம் அந்த மாநிலத்தில் சர்வ சாதாரணமப்பா என்றே சொல்லத் தோன்றுகிறது.
கொடூரக் கொலைகளைச் செய்த பெண்கள் கேரளாவில் இதற்கு முன்பும் இருந்துள்ளனர். எலி விஷம் வைத்து தனது குடும்பத்தினரைக் கொன்ற செளம்யா.. பெற்ற மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மஞ்சுஷா.. இந்த வரிசையில் இப்போது ஜோலியும் இணைந்துள்ளார்.. அவ்வளவுதான்.
கேரளாவை உலுக்கியுள்ள ஜோலி கதைக்குப் போகும் முன்பு இதற்கு முன்பு சிக்கிய இரண்டு கொடூரக் கொலைகாரப் பெண்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.. அதுவும் நெஞ்சைப் பதற வைக்கும் கொலைகள்தான்.

விசாரணை
கேரளாவின் அழகிய மாவட்டங்களில் ஒன்றுதான் கன்னூர். இந்த மாவட்டத்தில் உள்ள படனக்கரா ஊரைச் சேர்ந்தவர் செளம்யா. இவர் ஒரு கொலை வழக்கில் சிக்கினார். விசாரணையை முடுக்கி விட்டபோதுதான் செளம்யா எவ்வளவு பெரிய கொடூர கொலைகாரி என்பது தெரிய வந்தது.

கள்ளக்காதல்
செளம்யாவுக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது. இது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தெரிந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செளம்யா 2 குழந்தைகள், மாமானார், மாமியாரை அடுத்தடுத்து கொலை செய்தார். எப்படி தெரியுமா.. சாப்பாட்டில் எலி விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொலை செய்தார்.

கைது
இந்தக் கொலைகள் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட இடைவெளியில் நடந்ததால் யாருக்கும் சந்தேகம் வராமல் போய் விட்டது. பின்னர் கைது செய்யப்பட்டார் செளம்யா. வழக்கு விசாரணையில் இருந்து வந்தபோது 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி செளம்யா சிறைக்குள்ளேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கொடூர கொலை
அடுத்து அனுசாந்து என்பவர் தனது கள்ளக்காதலைக் காப்பதற்காக, காதலனுடன் சேர்ந்து மாமியாரையும், தனது சொந்த மகளையும் கொடூரமாகக் கொலை செய்து சிக்கினார். இதேபோல இன்னொரு பெண்ணும் தனது கள்ளக்காதலுக்காக பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்து அதிர வைத்தார். அந்தப் பெண்ணின் பெயர் மஞ்சுஷா. நெடுமாங்காடு பரந்தோட்டு கரந்தலா என்ற ஊரைச் சேர்ந்தவர்.

தொடர்பு
இவரது 16 வயது மகள்தான் மீரா. அம்மா மீது ரொம்பப் பாசம். மஞ்சுஷாவுக்கும் மகள் மீது நிறையப் பாசம்தான். அப்பா இல்லை மீராவுக்கு. அங்குதான் தடம் மாறினார் மஞ்சுஷா. இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அது நெருக்கமானது. இறுகிப் போனது. மீரா ஒரு தொல்லையாக, இடையூறாக தெரிய ஆரம்பித்தார் இருவருக்கும்.

ஜோலி
காமம் கண்ணை மறைத்ததால் மகள் மீதான பாசம் மறைந்து கோபம் வந்தது மஞ்சுஷாவுக்கு. பெற்ற மகள் என்றும் பாராமல் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். உடலை தூக்கி வீசி விட்டார். போலீஸார் துப்பு துலக்கி மஞ்சுஷாவைக் கைது செய்தபோது கேரளாவே அதிர்ந்து போனது. இன்று ஜோலி கைதாகியுள்ளார். அவர் செய்த கொலைகள்தான் அனைவரையும் பதற வைத்துள்ளன.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications