"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நான்கு வயது சிறுவன் ஷிகெல்லா (Shigella) பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொற்று குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், ஷிகெல்லா பாக்டீரியா என்றால் என்ன, அது எப்படிப் பரவுகிறது மற்றும் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இங்கே காணலாம்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த உலகையும் கொரோனா பாதிப்பு உலுக்கிப் போட்டது. அந்தப் பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. இதனால் வேறு புதிய வைரஸ் அல்லது பாக்டீரியா பாதிப்புகள் ஏற்படும்போது அது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

ஷிகெல்லா பாதிப்பு
இந்தச் சூழலில் தான் கேரளாவில் வெறும் 4 வயதே ஆன சிறுவன் ஒருவன் இந்த ஷிகெல்லா பாதிப்பால் உயிரிழந்துள்ளான். இதனால் பொதுமக்கள் அதீத அச்சத்தில் இருக்கிறார்கள். ஷிகெல்லா என்பது குடல் பகுதியைத் தாக்கும் ஒரு வகைப் பாக்டீரியா தொற்று ஆகும். இது 'ஷிகெல்லோசிஸ்' (Shigellosis) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பாக்டீரியா குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, கடுமையான வயிற்றுப்போக்கை உண்டாக்குகிறது. இது மிகவும் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது.
இந்த நோயின் முதல் அறிகுறியே கடுமையான வயிற்றுப்போக்கு தான். சில நேரங்களில் ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு கூட ஏற்படும். வயிற்று வலி மற்றும் பிடிப்பு கூட ஏற்படும். காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி, உடல் சோர்வு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
யாருக்கு அதிகப் பாதிப்பு?
இந்தத் தொற்று யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்றாலும், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதனால் ஆபத்து அதிகம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடையாததால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்குத் தீவிரமான நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுநீரக மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பாதிப்பு எளிதாக ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ஆபத்து
ஷிகெல்லா தொற்றின் மிகப் பெரிய ஆபத்தே உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதுதான். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் உடலில் உள்ள நீர் மற்றும் தாதுக்கள் வெளியேறிவிடும். தலைச்சுற்றல், அதிக தாகம், வாய் உலர்ந்து போதல், சிறுநீர் அளவு குறைதல், குழப்பமான மனநிலை மற்றும் ரத்த அழுத்தம் குறைதல் ஆகியவை ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
அசுத்தமான குடிநீர் குடிப்பது, சரியாகச் சமைக்கப்படாத அல்லது அசுத்தமான உணவைச் சாப்பிடுவது, கைகளைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடுவது, பாதிக்கப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருப்பது ஆகியவை காரணமாக இந்த ஷிகெல்லா பாக்டீரியா வேகமாகப் பரவும்.
தடுப்பது எப்படி
மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ்களை போலவே சுகாதாரமான பழக்கங்களைப் பின்பற்றுவதே இதை தடுக்கும் சரியான வழியாகும்.
சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் சோப்பு போட்டு கைகளை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். மேலும், சுத்தமான நீரைக் குடிப்பது, காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழிவு பயன்படுத்துவது, இறைச்சி மற்றும் உணவுகளை முழுமையாகச் சமைத்துச் சாப்பிடுவது, வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது எனச் சுகாதாரமான பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.
-
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ












Click it and Unblock the Notifications