Kerala Lottery Result: யாருக்கு அடிக்கப் போகுது ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் இன்று குலுக்கல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெறுகிறது. கேரளாவில் கடந்த இரு மாதங்களாக சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை சூடு பறக்க நடந்து வந்தது. முதல் பரிசு ரூ. 10 கோடி என்பதால் யாருக்கு இவ்வளவு பெரிய தொகை அடிக்கப் போகின்றதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டம் என்பது எதில் பொருந்துகிறதோ இல்லையோ, லாட்டரிக்கு பொருந்தும். லாட்டரியில் பரிசு யாருக்கு அடிக்கும், எப்போது அடிக்கும் என சொல்ல முடியாது. பல வருடங்களாக விடாமல் லாட்டரி சீட்டுக்கள் வாங்கி இதுவரை ஒருமுறை கூட பரிசு அடிக்காதவர்களும் உள்ளனர், வாங்கிய ஒரே சீட்டில் பரிசு அடித்தவர்களும் உண்டு.

இன்று குலுக்கல்
கேரளாவை பொறுத்தவரை அரசே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், வருடத்திற்கு 6 சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான கேரள சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது.
கேரள லாட்டரி பிரியர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெறுகிறது. கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்கு நடுவிலும் அங்கு சம்மர் பம்பர் டிக்கெட்டின் விற்பனை களை கட்டி வந்தது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 ஆகும்.
ரூ.10 கோடி யாருக்கு?
முதல் பரிசாக ரூ.10 கோடியும் இரண்டாவது பரிசாக ரூ.1 கோடியும் அளிக்கப்படுகிறது. முதல் பரிசாக 10 கோடி அளிக்கப்படுவதால் வாழ்க்கையில் நமக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். மொத்தம் 40 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான பாலக்காட்டில் வழக்கம் போல அதிக டிக்கெட்டுகள் விற்றுள்ளன. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக டிக்கெட் விற்பனையாகும் இடமாக பாலக்காடு மாவட்டமே உள்ளது. அதேபோல, பரிசுத்தொகையும் இந்த மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கே அதிகம் அடித்தையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2 மணிக்கு தெரிந்துவிடும்
கடந்த இரண்டு மாதங்களாக அனல் பறக்க நடைபெற்று கொண்டிருந்த டிக்கெட் விற்பனையின் இறுதி நாளான இன்று அதிர்ஷ்ட எண் எது என்று தெரிந்து விடும். இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் லாட்டரி அலுவலகத்தில் இதற்கான குலுக்கல் நடைபெறுகிறது. இதனால் யாருக்கு பரிசு அடிக்கப் போகிறதோ என லாட்டரி பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதேபோல் தாங்கள் வாங்கி வைத்திருக்கின்ற டிக்கெட்டுக்கு பரிசு விழுமா எனவும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இரண்டாவது பரிசாக ரூ.1 கோடியும் மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 12 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. நான்காவது பரிசாக ரூ.1 லட்சம் கடைசி 5 டிஜிட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம் ஆகும். அதாவது முதல் பரிசு வென்ற அதே எண் டிக்கெட்டில் இருந்து சீரியல் எண் மட்டும் மாறியிருந்தால் ஆறுதல் பரிசு அளிக்கப்படும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications