Swarna Keralam: ரூ 1 கோடி சுவர்ண கேரளம் லாட்டரி லக்கி வின்னர் யார்? இந்த நம்பர் இருக்கானு பாருங்க!
திருவனந்தபுரம்: சுவர்ண கேரளம் (SK-24) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியான நிலையில் யாருக்கு ரூ 1 கோடி அதிர்ஷ்டம் விழுந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதிர்ஷ்டம் இருந்தால் வாழ்க்கையே மாறும் என்பதற்கு இந்த லாட்டரி டிக்கெட்டுகள் உதாரணமாக விளங்குகிறது.
2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு சட்டப்படி முழு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது சுமார் 21 ஆண்டுகளாக தொடர்கிறது.

இதனால் தமிழகத்தில் எந்த கடைகளிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை இருக்காது. எனினும் அண்டை மாநிலமான கேரளாவில் இந்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில் தினசரி குலுக்கல்கள், வாராந்திர பரிசுகள், பம்பர் டிராக்கள் என பல்வேறு வடிவங்களில் மக்களின் பேராசை பணமாக்கப்படுகிறது. இதனால் வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைகளால் பலர் லாட்டரி வாங்கத் தொடங்குகிறார்கள்.
கேரள மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் 6 பெரிய பம்பர் லாட்டரிகளை நடத்துகிறது. இதில் சில குலுக்கல்களின் முதல் பரிசுகள் ரூ 10 கோடி முதல் ரூ 25 கோடி வரை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுவர்ண கேரளம் எனும் லாட்டரியில் முதல் பரிசு ரூ 1 கோடி என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிற்பகல் 3 மணிக்கு நடந்த குலுக்கலில் RO 829220 என்ற எண் வைத்திருந்தால் 1 கோடி ரூபாய் உங்களுக்குத்தான். அது போல் RX 578085 என்ற எண்ணை வைத்திருந்தால் இரண்டாவது பரிசாக ரூ 30 லட்சம் கிடைக்கும்.
RU 756384 என்ற எண் வைத்திருந்தால் மூன்றாவது பரிசாக ரூ 5 லட்சம் கிடைத்திருக்கும். இவ்வாறு 1 கோடி தொடங்கி தலா ரூ 100 வரை பரிசு கிடைத்திருக்கும். இந்த ரூ 1 கோடி வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என்பது இனிதான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications