Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா உள்ளாட்சித் தேர்தல்: முதல் முறையாக வாக்களித்த இடுக்கி 'பழங்குடிகள்'

Subscribe to Oneindia Tamil

பீர்மேடு: கேரளாவில் முதல் முறையாக தங்களது வாக்குரிமையை செலுத்தி ஜனநாயக கடமையாற்றி இருக்கின்றன பழங்குடி மக்கள்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் உள்வனப்பகுதியில் வெளி உலகத் தொடர்பு இல்லாத பழங்குடிகள் இன்னமும் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடி மக்கள் இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களித்தது இல்லை.

Kerala tribes vote for first time in History

தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் மேற்கொண்டது. பழங்குடிகளில் 31 பேருக்கு வாக்குரிமை கொடுத்து வாக்களிக்க அழைத்துச் சென்றனர் அரசு அதிகாரிகள்.

ஆனால் இவர்களில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். எஞ்சிய 14 பேரும் வனப்பகுதிகளில் இருந்து வெளியே வந்து வாக்களிக்க மறுத்துவிட்டனர். 9 பேர் வண்டிப் பெரியாறு சத்திரம் வாக்குச் சாவடியிலும் 8 பேர் வல்லக்கடவு வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

வனப்பகுதிகளில் வேட்டையாடுதலையும் உணவுப் பொருட்கள் சேகரிப்பையும் பிரதான தொழிலாக கொண்டவர்கள் இந்த பழங்குடிகள். வாக்களிப்பதற்காகவே முதல் நாள் இரவு 17 பேரும் வண்டிப் பெரியாறு சத்திரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாரம்பரிய உடைகளுக்கு பதிலாக மாற்று உடைகள் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அழைத்துச் சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+