இரவெல்லாம் அழுத விஸ்மயா.. மிரள வைத்த வாட்ஸ்அப் சேட்டிங்.. பகீர் வாக்குமூலம் தந்த கணவன்
விஸ்மயா கணவருக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: மனைவியுடன் சண்டை போட்டது உண்மைதான், ஆனால், அந்த வாட்ஸ்அப் போட்டோக்கள் எதுவுமே உண்மையில்லை என்று இளம்பெண் மர்ம மரணம் தொடர்பாக கணவர் போலீசில் கூறியுள்ளார்.
Recommended Video
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் விஸ்மயா.. கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டு இருந்தவருக்கு திடீரென கிரண்குமார் என்ற மாப்பிள்ளையை பார்த்து கல்யாண செய்து வைத்துள்ளனர்.
100 பவுன் நகை, டொயாட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான சீர்களை பெண்ணுக்கு தந்துள்ளனர்.. ஆனால், நாளுக்கு நாள் வரதட்சனை கொடுமை கணவர் வீட்டில் வெடித்துள்ளது.. கணவரின் கொடுமையான தாக்குதல்களுக்கு இளம் பெண் விஸ்மயா ஆளானார்.

சித்ரவதை
உடம்பெல்லாம் கட்டையால் அடித்து தாக்கி உள்ளார்.. ஆணியால் குத்தி சித்ரவதை செய்துள்ளார்.. இந்த விஷயம் எல்லாம் பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார் விஸ்மயா.. இறுதியில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்துவிட்டார்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது..

தற்கொலை
அதில், விஸ்மயா தூக்கில் தொங்கி இறந்துள்ளது முதல்கட்டமாக தெரியவந்தாலும், தன் மகளை கிரண்குமார் அடித்து கொன்றுவிட்டதாக போலீசாரிடம் பெற்றோர் கதறி புகார் தெரிவித்தனர். மரணத்துக்கு முன்னதாக, தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட காயத்தையும் உறவினர்களுக்கு விஸ்மயா வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்..

போட்டோக்கள்
இந்த போட்டோக்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போதுதான் அதாவது நேற்றிரவு கிரண்குமார் போலீசில் சரண் அடைந்தார்.. கிரண் குமார் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக இருந்திருக்கிறார்.. தனக்கு வரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி, அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும், அதனாலேயே மனைவியிடம் தகராறு வந்ததாகவும் போலீசில் சொல்லி உள்ளார்.

வாக்குமூலம்
இதுகுறித்து வாக்குமூலத்தில் கிரண்குமார் மேலும் சொன்னதாவது: "2 நாட்களுக்கு முன்பாக எங்கள் 2 பேருக்கும் சண்டை நடந்தது உண்மை தான்... அதனால் இரவெல்லாம் அழுது கொண்டிருந்தாள்.. ஆனால் தற்போது அவரை அடித்தது போல் காயங்களுடன் வரும் போட்டோக்கள் எதுவும் உண்மையில்லை.. எல்லாம் போலியானவை.. உறவினர்கள் சொல்வதும் பச்சை பொய்" என்று கூறியுள்ளார்.

காவல்
இதனைத் தொடர்ந்து இவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். இவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிரண் குமார் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது... எனினும் விஸ்மயா எப்படித்தான் இறந்தார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications