கேரளாவில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்- முதல் 2 மணிநேரங்களில் 9% வாக்கு பதிவு
திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதல் 2 மணிநேரங்களில் 9% வாக்குகள் பதிவாகி உள்ளன.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடத்தபட்டு வருகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் 61% வாக்குகள் பதிவாகின.

இதனைத் தொடர்ந்து கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் இடது முன்னணி, காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

5 மாவட்டங்களில் மொத்தம் 8,57,208 பேர் வாக்காளர்கள். மொத்தம் 451 உள்ளாட்சி அமைப்புகளின் 8116 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 28,142 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

-
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரை ‘சுத்து’ போட்ட தேர்தல் பறக்கும் படையினர்.. மதுரை அருகே பரபர -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications