விஸ்மயா விவகாரம்.. வரதட்சணை கொடுக்கவே மாட்டோம்.. வீட்டு வாசலில் எழுதி வைத்த கேரள பெண்கள்
திருவனந்தபுரம்: விஸ்மயா இறப்புக்கு பிறகு வரதட்சணை கொடுக்க மாட்டோம் என கேரளா பெண்கள் வீட்டு வாசலில் போர்டு எழுதி வைத்துள்ளனர்.
Recommended Video
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்மயா என்ற 24 வயது பெண் அவரின் கணவர் கிரண் குமார் வீட்டில் மர்மமான முறையில் பலியாகி கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமணத்தின் போது 100 பவுன் வரதட்சணை கொடுத்தும் மேலும் மேலும் வரதட்சணை கேட்டு கிரண்குமார் விஸ்மயாவை துன்புறுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கேரளா பெண்கள் #stopdowry, #justicevismaya ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரென்டிங்கில் வைத்துள்ளனர். மேலும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என தங்கள் வீட்டு வாசலில் எழுதி வைத்துள்ளனர்.
|
உயிருடன்
இறந்து போகும் மகளை விட விவாகரத்து பெற்றுவிட்டு உயிரோடு இருக்கும மகள் பல மடங்கு நல்லது. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்துங்கள். விஸ்மயா அனுபவித்த வலியை அவரது பேராசை கணவருக்கும் கிடைக்கும் வகையில் அவரை தூக்கிலிடுங்கள்.
|
வரவேற்க தயங்காதீர்
அன்பு பெற்றோர்கள்! திருமண உறவுகள் தோல்வி அடைந்து மகள்கள் உங்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை வரவேற்க தயங்காதீர்கள்.
|
அறிவுரைகள்
இன்னும் கூடுதலாய் சில வார்த்தைகள்...
"உன் அம்மாவும்/அக்காவும்/அத்தையும்/தங்கையும் கணவனைப் பிரிஞ்சு வாழ்ந்துட்டு இருக்காங்க. நீயும் வந்துட்டா அது நல்லா இருக்காது" போன்ற அறிவுரைகளைப் புறந்தள்ளுங்கள்.
|
விற்பனை
திருமணம் எனும் இனிய பந்தத்தை வரதட்சணை எனும் பெயரால் வியாபாரமாக்கிவிடாதீர்கள். பெண்கள் விற்பனைக்கு அல்லர். எங்களை விற்றுவிடாதீர்கள்.
|
வீட்டு வாசல்
கேரளாவில் விஸ்மயா சம்பவத்திற்கு பிறகு வரதட்சணை கொடுக்க மாட்டோம் என தங்கள் வீட்டு வாசல்களில் எழுதி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications