இப்படியும் ஒரு பலசரக்கு கடையா...? எர்ணாகுளத்தில் அசத்தும் எம்.டெக் பட்டதாரி இளைஞர்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஜீரோ பிளாஸ்டிக் முறையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார் எம்.டெக் பட்டதாரியான பிட்டு ஜான் என்ற இளைஞர்.
தனது கடை முழுவதும் கண்ணாடி ஜார்களை மட்டுமே வைத்து அதன்மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
சுற்றுச்சூழல் மீது கொண்ட அக்கறையின் காரணமாகவும், சூழலியலை பாதுகாப்பதில் தன்னால் முடிந்த பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த ஜீரோ பிளாஸ்டிக் முறையை பின்பற்றி வருகிறார் ஜான்.

வெளிநாட்டு பயணம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற ஊரில் கிரீன் ஸ்டோர் என்ற பெயரில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார் பிட்டு ஜான் என்ற இளைஞர். எம்.டெக் பட்டதாரியான இவர் சுற்றுச்சூழல் மீது பேரார்வம் மிக்கவர். படித்த படிப்புக்கேற்றவாறு பெங்களூரில் பணியாற்றி வந்த அவர், அலுவலக பயணமாக ஒரு முறை லண்டன் சென்ற போது அங்கிருந்த ஜீரோ பிளாஸ்டிக் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றை பார்த்துள்ளார். இதேபோல் தனது ஊரில் கடை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த பிட்டு ஜான் ஊர் திரும்பியதும் அது தொடர்பாக குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.

பல லட்சங்களில்
பொறியியலில் இரண்டு பட்டங்கள் பெற்று மாதம் லட்சங்களில் ஊதியம் பெற்ற மகன், திடீரென பல சரக்கு கடை நடத்துவதாக கூறினால் எந்த பெற்றோர் தான் ஏற்பார்கள். இதனால் பிட்டு ஜான் கூறிய விருப்பத்தை முதலில் ஏற்க மறுத்த அவரது பெற்றோர், பின்னர் மகனின் புதுமையான முயற்சிக்கு இசைவு தெரிவித்தனர். இதையடுத்து கொத்தமங்கலத்திலேயே கிரீன் ஸ்டோர் என்ற பெயரில் கடையை தொடங்கிய பிட்டு ஜான், தனது கடையில் ஒரு சிறிய பிளாஸ்டிக்கிற்கு கூட இடமளிக்கவில்லை.

ரூ.45 லட்சம் மதிப்பில்
கடை முழுவதும் கண்ணாடி ஜார்களும், பேப்பர் பைகளும் மட்டுமே பயன்படுத்தும் இவர், கிரீன் ஸ்டோரின் உட்கட்டமைப்பு வசதிக்காக மட்டும் ரூ.45 லட்சம் செலவழித்துள்ளார். அதாவது தனது சேமிப்புத் தொகை அனைத்தையும் சூழலியலை காக்க வேண்டும் என்ற முனைப்பில் பயன்படுத்தியுள்ளார். இதனிடையே இது தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றிடம் பேசிய அவர், நாளொன்றுக்கு 200 முதல் 250 வாடிக்கையாளர்கள் வரை வந்து செல்வதாகவும், மக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

ஊக்குவிப்பு
ஜானின் இந்த சீரிய முயற்சியை முன்னுதாரணமாக கொண்ட பலரும், ஜீரோ பிளாஸ்டிக் முறையில் அங்காடிகள் திறக்க அவரிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் கடையின் உட்கட்டமைப்பை நிறுவுவது, பராமரிப்பது என சந்தேகங்கள் கேட்டுள்ளனர். இவரும் பிளாஸ்டிக் இல்லாத் நிலை உருவாக வேண்டும், சுற்றுச்சூழல் பேணப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னிடம் ஆலோசனைகள் கேட்பவர்களுக்கு உரிய யோசனைகள் அளித்து ஜீரோ பிளாஸ்டிக் முறையில் கடைகள் நிறுவ வழிகாட்டி வருகிறார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications