Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் நிலச்சரிவு.. மண்ணுக்குள் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்.. சடலமாக மீட்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிலர் சிக்கினர். இந்நிலையில் தற்போது வரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

 Members of the same family caught in a landslide in Kerala; 3 dead bodies were recovered

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா தாலுக்காவுக்குட்பட்ட குடையாத்தூர் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியான. இதனையடுத்து தீயணைப்பு துறையினர், மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதில், மூன்று பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த பகுதியிலிருந்த மற்றவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றபட்டுள்ளனர். அதேபோல கனமழை நீடித்து வரும் நிலையில், இப்பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தற்போது சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

அதேபோல, கர்நாடகாவிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. கனமழை காரணமாக மாண்டியா மாவட்டத்தில் வெள்ளம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கார்கள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இம்மாவட்டத்தில் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மைசூரு-பெங்களூரு சாலையில் ராமநகரில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. பெங்களூரு-மைசூரு பேருந்துகள் ஹரோஹள்ளி- கனகபுரா- ஹலகூர்- மளவள்ளி- மைசூரு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மைசூரு மற்றும் மாண்டியா மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மழை கடுமையாக பாதித்துள்ளது. கனமழை தொடரும் நிலையில், தாழ்வான மற்றும் நீர் நிலைகளில் ஒட்டியுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+