பேபி அணையில் மரங்கள்- கேரளா அடாவடித்தனம்-மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்ததால் அனுமதி திடீர் ரத்து!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை கேரளா அரசு திடீர் என ரத்து செய்துள்ளது. இத்தனைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்த பின்னரே இந்த அனுமதியை ரத்து செய்து அடாவடித்தனத்தை காட்டியுள்ளது கேரளா.
முல்லைப் பெரியாறு பேபி அணைப் பகுதியில் அணையைப் பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கேரளா பலமுறை நிராகரித்தது. ஆனால் திடீரென கேரளா அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

ஸ்டாலின் நன்றி கடிதம்
பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த தமிழகத்தின் இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது. மேலும் பேபி அணையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த மரம் வெட்டுவதற்கான அனுமதி உதவும் என கூறியிருந்தார். ஆனால் கேரளாவின் வனத்துறை அமைச்சர் சசீந்தரனோ, தமிழகத்துக்கு அனுமதி வழங்கியது குறித்து அதிகாரிகள் தமக்கு தெரிவிக்கவில்லை என்றார்.

கேரளா திடீர் மாற்றம்
அத்துடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்குப் பின்னரே இப்படியான அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். அதிகாரிகள் தரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். கேரள அமைச்சர் சசீந்தரனின் இந்த பதிலால் குழப்பம் ஏற்பட்டது.

கேரளாவின் கொந்தளிப்புக்கு காரணம்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரளாவின் நிலைப்பாடு. தற்போது மரங்களை வெட்ட அனுமதித்தால் பேபி அணை பலப்படுத்தப்படும். அப்படி பேபி அணை பலப்படுத்தப்பட்டால் கேரளாவின் நிலைப்பாடு பொய் என்றாகிவிடும். இதனால் கேரள அமைச்சர் சசீந்தரன், தமிழகத்துக்கு மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த விவகாரத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்.

மரங்களை வெட்டும் அனுமதி ரத்து
இதனிடையே பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்துக்கு தரப்பட்ட அனுமதியை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. மேலும் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அமைச்சர் சசீந்தரன் தெரிவித்துள்ளார். பேபி அணையை பலப்படுத்தினால் தமிழகமானது முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்கிவைக்க உரிமை கோரும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய அடாவடி நடவடிக்கையை கேரளா எடுத்துள்ளது என்கின்றனர் மூத்த வனத்துறை அதிகாரிகள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications