பேபி அணையில் மரங்கள்- கேரளா அடாவடித்தனம்-மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்ததால் அனுமதி திடீர் ரத்து!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை கேரளா அரசு திடீர் என ரத்து செய்துள்ளது. இத்தனைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்த பின்னரே இந்த அனுமதியை ரத்து செய்து அடாவடித்தனத்தை காட்டியுள்ளது கேரளா.
முல்லைப் பெரியாறு பேபி அணைப் பகுதியில் அணையைப் பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கேரளா பலமுறை நிராகரித்தது. ஆனால் திடீரென கேரளா அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

ஸ்டாலின் நன்றி கடிதம்
பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த தமிழகத்தின் இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது. மேலும் பேபி அணையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த மரம் வெட்டுவதற்கான அனுமதி உதவும் என கூறியிருந்தார். ஆனால் கேரளாவின் வனத்துறை அமைச்சர் சசீந்தரனோ, தமிழகத்துக்கு அனுமதி வழங்கியது குறித்து அதிகாரிகள் தமக்கு தெரிவிக்கவில்லை என்றார்.

கேரளா திடீர் மாற்றம்
அத்துடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்குப் பின்னரே இப்படியான அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். அதிகாரிகள் தரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். கேரள அமைச்சர் சசீந்தரனின் இந்த பதிலால் குழப்பம் ஏற்பட்டது.

கேரளாவின் கொந்தளிப்புக்கு காரணம்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரளாவின் நிலைப்பாடு. தற்போது மரங்களை வெட்ட அனுமதித்தால் பேபி அணை பலப்படுத்தப்படும். அப்படி பேபி அணை பலப்படுத்தப்பட்டால் கேரளாவின் நிலைப்பாடு பொய் என்றாகிவிடும். இதனால் கேரள அமைச்சர் சசீந்தரன், தமிழகத்துக்கு மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த விவகாரத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்.

மரங்களை வெட்டும் அனுமதி ரத்து
இதனிடையே பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்துக்கு தரப்பட்ட அனுமதியை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. மேலும் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அமைச்சர் சசீந்தரன் தெரிவித்துள்ளார். பேபி அணையை பலப்படுத்தினால் தமிழகமானது முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்கிவைக்க உரிமை கோரும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய அடாவடி நடவடிக்கையை கேரளா எடுத்துள்ளது என்கின்றனர் மூத்த வனத்துறை அதிகாரிகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications