மூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்? என்ன காரணம்?
திருவனந்தபுரம்: மூணாறில் நிலச்சரிவில் சிக்கியுள்ளோரை மீட்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. கடினமான சூழலால் மீட்பு பணிகள் தாமதமாகின்றன.
கேரள மாநிலம் மூணாறு 2 நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. கண்ணன் தேவன் டீ எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இங்கு பல்வேறு வீடுகளில் தங்கி இருந்தனர்.
இதில் 25 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்துள்ளன. 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர்.

35 பேர்
இன்று காலை வரையிலான நிலவரப்படி, பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு மேலே இன்னும் பலரும் மணலுக்குள் புதைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சுமார் 35 பேர் மணலுக்குள் புதையுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

மோப்ப நாய்கள்
தேசிய பேரிடர் மீட்பு படையினர், மோப்ப நாய்களை கொண்டுவந்துள்ளனர். எங்கெல்லாம் உடல்கள் இருக்கின்றனவோ அதை ஓரளவுக்கு மிகச்சரியாக நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. அதே நேரம் மூணாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காற்று காரணமாகவும் மீட்பு படையினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

கடும் குளிர்
இதுதொடர்பாக மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், மேலே செல்ல செல்ல வெப்பநிலை மாறுபாடு அடைகிறது. கடுமையான குளிர் நிலவுகிறது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணிகளில் ஈடுபடுவது இயலாத காரியமாகி விடுகிறது. எனவே ஓய்வெடுத்து ஓய்வெடுத்து தான் மீட்பு பணிகளில் ஈடுபடுகிறோம்.
Recommended Video

மழை
திடீரென பெய்யக்கூடிய மழையும் எங்களை முடக்கிப் போட்டு விடுகிறது. அதற்கு மேலும் பணியாற்றினால் மீட்பு பணியில் ஈடுபடுவோரின் உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலைதான் நிலவுகிறது. எனவேதான் மீட்பு பணிகளில் பெரும் சிரமம் நிலவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications