ஓணம் பம்பர் லாட்டரி: ரூ.25 கோடி அடித்தும் பரிதவிப்பு.. ஒருவழியாக நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழர்கள்
திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூபாய் 25 கோடி பரிசுத்தொகை வென்ற தமிழர்கள் 4 பேரும் லாட்டரி டிக்கெட்டை கேரளாவில் தான் வாங்கினார்களா? இல்லை கள்ளச்சந்தையில் வாங்கினார்களா என்று விசாரிக்க குழு அமைத்திருந்த நிலையில், தற்போது தமிழர்கள் 4 பேருக்கும் அந்த பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோக கிறிஸ்துமஸ் புத்தாண்டு, விஷு, ஓணம், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது.

இதில் ஓணம் பம்பர் லாட்டரிக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை என்பதால் இந்த லாட்டரி சீட்டை வாங்க கேரள மக்கள் மட்டும் இன்றி வெளி மாநிலத்தவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். கேரளாவில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பலருக்கும் லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு விஷூ பம்பர் லாட்டரி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கிடைத்தது.
வெளி மாநிலத்தவர்களுக்கும் லாட்டரியில் கணிசமாக லாட்டரியில் பரிசுத்தொகை கிடைப்பதால் டிக்கெட் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும், கேரள அரசின் லாட்டரி விதியின் படி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் லாட்டரியை வாங்கலாம். ஆனால், கேரளாவுக்கு வந்து வாங்கியதை பரிசுத்தொகை விழும் போது ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இதானால், கொரியர் மூலமாகவோ வேறு யாரிடமாவது கொடுத்து லாட்டரியை வாங்கினால் பரிசுத்தொகை கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசுத்தொகை அடித்த T230662 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த 4 பேர் வாங்கியது தெரியவந்தது. பாலக்காட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த உறவினரை பார்க்க சென்றுவிட்டு திரும்பும் வழியில் வாளையாறில் டிக்கெட் வாங்கியதாக பாண்டியராஜன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால் அப்படி வந்து சென்றது மற்றும் லாட்டரி வாங்கியதற்கான அத்தாட்சி எதுவும் அவர்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதுதான் தற்போது அவர்களுக்கு சிக்கலாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அன்புரோஸ் என்பவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கேரள லாட்டரி ஏஜென்சியால் கமிஷன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாகவும் இதனால் அவர்களுக்கு பரிசுத்தொகையை கொடுக்கக் கூடாது. லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகையை நற்காரியங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள அரசு விசாரணையை தொடங்கியது. லாட்டரி துறையின் இயக்குனர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு பரிசுத்தொகை அடித்தவர்கள் கேரளாவிற்கு வந்த போதுதான் லாட்டரியை வாங்கினீர்களா? என்பதை உறுதி செய்த பிறகே பரிசுத்தொகையை அளிக்கும் என்றது. கேரள அரசு விதிகளின் படி, கேரள மாநில லாட்டரியை வெளி மாநிலங்களில் விற்பனை செய்ய முடியாது. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால் அவர்கள் கேரளாவிற்கு வந்ததற்கான காரணம் மற்றும் வந்ததற்கான சான்று ஆகியவை பரிசோதிக்கப்படும்.

புகார் எதுவும் அளிக்கப்படாவிட்டாலும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை விழுந்தால் மேற்கூறியவற்றை சரிபார்த்த பிறகே பரிசுத்தொகை உரியவரிடம் ஒப்படைக்கப்படும். இதில் முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் கேரள லாட்டரித்துறை உடனடியாக வருமான வரித்துறைக்கு பரிசுத்தொகை கொடுக்கப்படாது என்ற தகவலை தெரிவிக்கும். எனவே, இந்த முறை பம்பர் பரிசுத்தொகை லாட்டரியில் பரிசுத்தொகை அடித்தவர்களுக்கே கிடைக்குமா அல்லது அரசுக்கே கிடைக்குமா என்று கேரளாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு ஓனம் லாட்டரி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பரிசுத்தொகை வென்ற 4 பேரும் லாட்டரி டிக்கெட்டை கேரளாவில் தான் வாங்கினார்களா? இல்லை கள்ளச்சந்தையில் வாங்கினார்களா என்று விசாரிக்க குழு அமைத்திருந்த நிலையில், தற்போது கேரள அரசு தமிழர்கள் 4 பேருக்கும் அந்த பரிசுத்தொகை வழங்கியுள்ளது. இதனால் பரிசு அடித்தும் பரிசுத்தொகை கிடைக்குமா என்று எதிர்பார்த்த தமிழர்கள் 4 பேரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications