கேரளாவில் களைகட்டும் ஓணம்- கவனம் ஈர்க்கும் பூணூல் இல்லாத திராவிடர் நிற மகாபலி சக்கரவர்த்தி!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பூணூல் தவிர்க்கப்பட்ட திராவிடர் நிறமான கறுப்பு நிற மகாபலி சக்கரவர்த்தி காட்சி தருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரளாவை ஆண்ட திராவிடர் மரபின மன்னர்களில் ஒருவர் மகாபலி அல்லது மாபலி. விழாக்கள், மன்னர்களின் சிறப்புகளில் ஏதோ ஒரு புராணத்தை இணைத்துவிடுவது என்பது இந்துத்துவ மரபு.

ஓணம் பண்டிகை
கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனுக்கும் கடவுளரான மகா விஷ்ணுவுக்கும் ஒரு இணைப்பை உருவாக்கும் புராணக் கதைதான் வாமன அவதாரம். மகாவிஷ்ணுவின் அனுமதியுடன் ஆண்டுக்கு ஒருமுறை தம் மக்களை காண மகாபலி சக்கரவர்த்தி வலம் வருகிறார். அத்தகைய நன்னாளையே ஓணம் பண்டிகையாக கேரளா மக்கள் கொண்டாடுகின்றனர். அதாவது தங்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தையை மக்கள் வரவேற்கும் திருவிழாதான் ஓணம் பண்டிகை. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள் செப்டம்பர் 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

பொதுவான மகாபலி உருவம்
பொதுவாக மகாபலி சக்கரவர்த்தி, அசுரர் குலத்தவர்; அரக்கர் இனத்தவர் என இந்துத்துவா பார்வையில் சொல்லப்பட்டது; அத்துடன் நிற்காமல் புராணங்களில் வலம் வரும் மன்னர் கதாபாத்திரங்கள் போல மகாபலி சக்கரவர்த்திக்கும் பூணூல் அணிவித்து பருமனான உடல் கொண்டவராகவே சித்தரித்து வந்தனர். இத்தகைய மகாபலி உருவங்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

திராவிடர் மகாபலி
ஆனால் கேரளாவில் இந்த முறை மகாபலி சக்கரவர்த்தியின் உருவமே மாறி இருக்கிறது. அதாவது மக்களோடு மக்களாக வாழ்ந்து மடிந்த மாபெரும் சக்கரவர்த்தி என்பதால், திராவிடர் மரபினத்துக்கு உரித்தான கறுமை நிறத்துடன்; கேரளா மக்களின் பண்பாட்டுக்கே உரித்தான குடையுடன் பூணூல் அல்லாத வேட்டி கட்டிய, உடலில் நீல நிற துண்டுடன் இம்முறை கேரளாவில் மகாபலி சக்கரவர்த்தியின் உருவம் இடம்பெற்றுள்ளது. சுருக்கமாக
சொன்னால் ஒரிஜனல் திராவிடர் மகாபலி மன்னர் உருவங்கள்தான் இம்முறை கேரளா சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ளன.

கேரளா கல்லூரிகளில்...
கேரளாவில் இடதுசாரி மாணவர் சங்கங்கள் வலிமையாக இருக்கும் கல்லூரிகளில் திராவிடர் மகாபலி சக்கரவர்த்தி உருவங்கள்தான் ஒட்டப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் மாபெரும் மன்னன் என்பதாலேயே மகாபலி சக்கரவர்த்தியின் இந்த மாறுபட்ட உருவத்தை பயன்படுத்துகிறோம் என்கின்றனர் மாணவர் அமைப்பினர். ஆனாலும் மாணவர்கள் தன்னிச்சையாகவே ஒருமித்த எண்ணமாகவே திராவிடர் மகாபலி உருவத்தை பயன்படுத்துகின்றனர் எனவும் மாணவர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
கேரளாவின் ‘தோழன்’ பினராயி.. வங்கத்துச் 'சிங்கம்' மம்தா.. மீண்டும் வெல்வார்களா? களம் எப்படி இருக்கு? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications