வெறும் இந்த கீரையே போதும்.. நோயை தெறித்து ஓடவைக்கும் சக்கரவர்த்தி இலை.. கீரைகளின் ராஜா "சக்ரவர்த்தி"
திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு என்ற முயற்சி செய்து வருகிறது. தற்போது அதற்கான பணிகளை தொடங்கி இருக்கும் மத்திய அரசு மக்களிடமும் கருத்து கேட்டது. இதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து ஜூலை 28 ஆம் தேதி வரை கருத்துக்களை பெற்றது.

மத்திய அரசு கொண்டு வரும் இந்த பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள் என ஒவ்வொரு மதத்தினரும் சில சிவில் சட்டங்களை தத்தமது மதத்தின் அடிப்படையில் பின்பற்ற அரசியலமைப்பு அதிகாரம் அளிக்கிறது.
இந்த நிலையில் இதனை கலைத்து அனைத்து சட்டங்களையும் ஒன்றாக்கி பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். இதன் காரணமாக சிறுபான்மையினரின் மத சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இச்சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.
சமீபத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "தேர்தல் நோக்கத்துக்காக பாஜக அரசு இந்த பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயல்கிறது. இது பெரும்பான்மைவாத நோக்கம். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒரே நாடு, ஒரே கலாச்சாரத்துக்கு கொண்டு செல்கிறது. இதனை மத்திய அரசும், மத்திய சட்ட ஆணையமும் திரும்பப்பெற வேண்டும்." என வலியுறுத்தி இருந்தார்.
கேரளாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸும் இதற்கு எதிராகவே உள்ளது. முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதால் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அரசின் இந்த தீர்மானத்திற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு தெரிவித்தன. பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான இந்த தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேறியது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications