Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரம்மாண்டத்தின் உச்சம்! திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த மோடி! இனி சர்வதேச வர்த்தகமே மாறும்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்து வைத்தார். நாட்டின் முதல் டீப் வாட்டர் டிரான்ஷிப்மென்ட் துறைமுகமான இது கடல் வர்த்தகத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும். இதுவரை பெரிய சர்வதேச கப்பல்கள் இந்தியாவில் நிறுத்த துறைமுகம் இல்லாமல் இருந்த நிலையில், அந்த நிலையை விழிஞ்சம் துறைமுகம் மாற்றும்.

தொழிற்துறையை டெலவப் செய்யக் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது அம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

PM Modi Inaugurates Adani s Vizhinjam Seaport in Kerala Boosting India s Maritime Ambitions

விழிஞ்சம் துறைமுகம்

பிபிபி எனப்படும் அரசு- தனியார் பங்களிப்பில் இணைந்து இந்தத் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.8,867 கோடி செலவில் அதானி நிறுவனம் இந்தத் துறைமுகத்தைக் கட்டியுள்ளது. தேவையான சோதனைகள் எல்லாம் செய்து கடந்த டிசம்பர் மாதம் துறைமுகத்திற்கு வர்த்தகச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், இதைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் பங்கேற்றனர்.

ஏன் முக்கியம்

அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகானாமிக் ஜோன் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இணைந்து கட்டப்பட்ட இந்தத் துறைமுகம் தான் நாட்டின் முதல் டீப் வாட்டர் டிரான்ஷிப்மென்ட் துறைமுகமாகும். அதாவது சர்வதேச ரூட்களில் இயங்கும் பெரிய கப்பல்கள் இதுவரை கொழும்புக்குச் செல்லும். அங்கிருந்து அது சிறிய கண்டெய்னர் கப்பல்களில் மாற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படும் சூழலே இருந்தது. இந்த விழிஞ்சம் துறைமுகம் அதுபோல பெரிய கப்பல்களைக் கூட எளிதாகக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரிய துறைமுகங்களைக் கூட ஈஸியாக கையாள முடியும் என்பதால் இந்தத் துறைமுகத்திற்கு வருவாய் அதிகரிக்கும். மேலும், முன்பு இந்தியா வந்த கப்பல்களும் கூட கொழும்பு சென்று அங்கிருந்தே சிறிய கப்பல்கள் மூலம் வர வேண்டும் என்பதால் செலவுகள் அதிகரித்தன. இப்போது அவை கேரளாவிலேயே கையாளப்படும் என்பதால் செலவும் கூட கணிசமாகக் குறையும்

பிபிபி முறை

விழிஞ்சம் துறைமுகத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி மட்டுமின்றி இந்தத் துறைமுகத்தைக் கையாள்வது கூட பிபிபி முறையில் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ₹8,867 கோடியாகும். அதானி குழுமம் இந்தத் துறைமுகத்தைக் கட்டியுள்ளது.

சர்வதேச ரூட்டிற்கு மிக அருகில்

இந்தத் துறைமுகம் அமைந்துள்ள இடம் தான் ரொம்பவே முக்கியமானது.. சர்வதேச கப்பல் பாதைக்கு மிக அருகே 10 நாடிக்கல் மைல் தொலைவில் இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. இதன் ஆழம் 20 மீட்டருக்கு மேல் இருப்பதால் மிகப் பெரிய கண்டெய்னர் கப்பல்களையும் எளிதாகக் கையாள முடியும். இதுபோல 20+ மீட்டர் ஆழம் தேவைப்பட்ட கப்பல்கள் இத்தனை காலம் கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூரில் நிறுத்தப்பட்ட நிலையில், அவை இனி இங்கு நிறுத்தப்படலாம் என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் துறைமுகம் இப்போது தான் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுகிறது என்றாலும் கடந்த சில மாதங்களாகவே இதில் சோதனை முறையில் கப்பல்கள் நிறுத்தப்பட்டு வந்தன. சில மாதங்களில் 250+ கண்டெய்னர் ஷிப் நிறுத்தப்பட்ட போதிலும் எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+