இரவு நேர விருந்தில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக 60 பேர் கைது.. டிவி நடிகைக்கும் தொடர்பு?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வாகமனில் இரவு விருந்து என்ற பெயரில் போதைப் பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக இளம்பெண் உள்பட 60 பேரை கேரளா போலீஸார் கைது செய்தனர்.

இந்த விருந்தில் சின்னத்திரை டிவி நடிகை ஒருவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. வாகமனில் ஒரு வட்டாபாதல் என்ற இடத்தில் ஒரு ரிசார்ட் உள்ளது. இங்கு போதை பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன.

Police arrested 45 including women at Night Party in Kerala

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது இரவு நேர விருந்து என்ற பெயரில் போதை பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விருந்து களைகட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் தோடுபுசாவைச் சேர்ந்த அஜ்மல் (30), மலப்புரத்தைச் சேர்ந்த மெஹர் ஷெரின் (26), எடப்பலைச் சேர்ந்த நபில் (36), சல்மான் (38), அஜய் (41), கோழிக்கோட்டைச் சேர்ந்த சவுகத் (36), காசர்கோட்டைச் சேர்ந்த முகமது ரஷீத் (31), சாவக்காட்டைச் சேர்ந்த நிஷாத். (36) மற்றும் திரிபுனிதுராவில் வசிக்கும் பிராஸ்டி விஸ்வாஸ் (23) ஆகியோர் முக்கியமானவர்களாவர்.

இந்த நிகழ்ச்சியில் டிவி நடிகை ஒருவரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+