குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை ஜாமீனில் விடுவித்த போலீஸ்.. என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ, சனிக்கிழமை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் நடைமுறைகளை முடித்த பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மாலை 5.30 மணியளவில் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். போலீசாரே அவரை நேரடியாக ஜாமீனில் விடுவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் வழக்கில் குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ (41 வயது) இன்று காலை எர்ணாகுளம் ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த போலீசார், எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, மாலை 5.30 மணியளவில் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். பிரபல மலையாள செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலின் படி, ஷைன் டாம் சாக்கோவிற்கு காவல் நிலையத்திலிருந்து நேரடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. ஏப்ரல் 21 அல்லது 22 ஆம் தேதிகளில் விசாரணைக் குழு முன் ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக ஓட்டலில் கைதான போது, போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதிப்படுத்த, அவரது இரத்தம், நகம் மற்றும் முடி உள்ளிட்ட மாதிரிகளை அறிவியல் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியிருக்கிறார்கள். இந்த மாதிரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும், முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதால், மருத்துவ பரிசோதனை உட்பட மேலும் நடைமுறைகளுக்காக நடிகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. நடைமுறைகளுக்குப் பிறகு, அவர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் எர்ணாகுளம் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு பதிலளிக்க ஷைன் மறுத்துவிட்டார்.
என்ன நடந்தது?
இன்று காலை குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் ஹோட்டலில் நடந்த போதைப்பொருள் சோதனை தொடர்பாக கொச்சி நகர போலீசார் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னரே வழக்குப் பதிவு செய்தனர். போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருட்கள் (NDPS) சட்டத்தின் 27b, 29 பிரிவுகளின் கீழ் ஷைன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் கோழிக்கோட்டைச் சேர்ந்த அகமது முர்ஷத் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த அகமது முர்ஷத் மீது, ஆதாரங்களை அழித்ததற்காகவும், ஒரு குற்றம்சாட்டப்பட்டவரை பாதுகாக்க தவறான தகவல்களை வழங்கியதற்காகவும் அவர் மீது பிஎன்எஸ் பிரிவு 238 இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எர்ணாகுளம் டவுன் வடக்கு போலீசார் இன்று நடத்திய விசாரணையின் போது, போதைப்பொருளைப் பயன்படுத்தியதாக ஷைன் ஒப்புக்கொண்டார். போலீசார் ஹோட்டலுக்கு வந்தபோது, யாரோ தன்னைத் தாக்க முயற்சிப்பார்கள் என்று பயந்து அறையை விட்டு வெளியேறியதாக ஷைன் டாம் சாக்கோ போலீசாரிடம் கூறினாராம். எனினும் அவசரமாக ஹோட்டலை விட்டு வெளியேறியது குறித்து ஷைன் அளித்த வாக்குமூலம் உண்மையா என்று நிச்சயம் விசாரிப்போம் என்றும் போலீசார் கூறினார்கள்.
முன்னதாக 2015 ஆம் ஆண்டு கடவந்தரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கில் அண்மையில் தான் ஷைன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இப்போது புதிய வழக்கில் சிக்கியிருக்கிறார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications