இன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு!
சபரிமலை கோவிலுக்குள் இன்று பெண்களுடன் சென்று வழிபடுவேன் என்று மும்பையை சேர்ந்த புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் இன்று பெண்களுடன் சென்று வழிபடுவேன் என்று மும்பையை சேர்ந்த புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் மீது மீண்டும் விசாரணை நடக்க உள்ளது.
ஆனால் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல இடைக்கால தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் அங்கு கோவிலுக்குள் பெண்கள் செல்ல முயன்று வருகிறார்கள்.

நடை திறப்பு
இந்த நிலையில் சபரிமலை கோவிலில் நடைபாதை நேற்று திறக்கப்பட்டது. மகரவிளக்கு மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து சபரிமலை கோவிலுக்கு மாலை அணிவித்து இருந்த ஆண்கள் பலர் கோவிலுக்கு சென்றனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு
இதையடுத்து நேற்று ஆன்லைன் மூலம் சபரிமலை கோவிலுக்கு செல்ல 10 பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஆந்திராவில் சபரிமலைக்கு வந்த 10 நடுத்தர வயது பெண்கள், பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

வழிபாடு
இந்த நிலையில் இன்று சபரிமலை கோவிலில் வழிபாடு நடத்த போவதாக புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். இவர் சபரிமலைக்கு செல்ல தன்னுடன் 5 பெண்களை அழைத்து கொண்டு கடந்த வருடம் சென்றார். ஆனால் போராட்டம் காரணமாக இவர் கொச்சி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்து இந்த வருடம் மீண்டும் அவர் கோவிலில் வழிபாடு நடத்த உள்ளார்.

எதிர்பார்ப்பு
இன்று அவர் கோவிலில் வழிபாடு நடத்த உள்ளார். இதனால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பம்பை, சன்னிதானம், நிலக்கல் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏ.டி.ஜி.பி. தலைமையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications