சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆன்லைன் டிக்கெட் வாங்கி தருவதாக மோசடி.. பக்தர்களே உஷார்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக, ஆன்லைன் மூலமாக நிறைவேற்ற டிக்கெட் முன்பதிவில், சில ஏஜென்டுகளால் முறைகேடுகள் நடப்பதால், பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லக்கூடிய பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஆன்லைன் மூலமாக இ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு வருவோருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

ஆன்லைன் பாஸ்
மண்டல மகரவிளக்கு பூஜையை ஒட்டி, ஆன்லைன் மூலமாக பாஸ் வழங்கும் பணியை சபரிமலை கோவில் நிர்வாகம் ஆரம்பித்தது. ஆனால், 12 மணி நேரத்துக்குள் 44 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. இதையடுத்து 10 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தெரியாத பக்தர்களிடம் இருந்து சிலர் பாஸ் பெற்று தருவதாக போலியாக வாக்குறுதி அளித்து பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதிகரித்துள்ளன.

தெலுங்கானாவில் மோசடி
சமீபத்தில் தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத் நகரில் 4 பக்தர்களிடம், தலா 1,250 ரூபாய் கட்டணமாக பெற்றுக்கொண்டு சபரிமலைக்கு பாஸ் பெற்று தருவதாக கூறி ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது. ஆனால் உண்மையிலேயே சபரிமலைக்கு செல்வதற்கு ஆன்லைனில் புக் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கர்நாடக பக்தர்கள்
இதே போல தான், கர்நாடகாவில் 8 பக்தர்களுக்கு போலியாக ஒரு கும்பல் பாஸ் வினியோகம் செய்துள்ளது. இந்த பாஸை எடுத்துக்கொண்டு பக்தர்கள் சபரிமலை சென்ற போது நிலக்கல் பகுதியில் வைத்து அது போலி என்று காவல்துறை கண்டுபிடித்து அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இ பாஸ் பெற வெப்சைட்
எனவே பக்தர்கள் இது போன்ற போலி ஏஜென்டுகளை நம்பி ஏமாற வேண்டாம். நேரடியாக, https://sabarimalaonline.org/#/login என்ற வலைதளத்திற்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆனால் தற்போது டிக்கெட் வழங்குவதற்கான அளவு முடிந்துவிட்டது. ஒருவேளை மாநில அரசு தளர்வு கொண்டுவந்து, கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கினால், அப்போது பக்தர்கள் பலன் பெறலாம். ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம் என்பதே கோரிக்கை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications