அசோக் கெலாட் vs சசி தரூர்.. சூடுபிடிக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்! சோனியா கிரீன் சிக்னல்.. பின்னணி
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு எம்பி சசி தரூர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங். தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட சோனியா காந்தி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் கடந்த 23 வருடங்களில் மிகப்பெரிய மாற்றம் உருவாகி வருகிறது. நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் தலைவராக பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால் சோனியா காந்திக்கு உடல்நிலை. இனியும் அவரால் கட்சியை வலுவாக வழிநடத்த முடியாது. இதை அவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கூறிவிட்டார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இன்னொரு பக்கம் நான் காங்கிரஸ் கட்சிக்காக போராடுகிறேன். களத்தில் நிற்கிறேன். பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் தலைவராக விருப்பமில்லை. ஆளை விடுங்கள் என்று ராகுல் காந்தியும் ஒதுங்கிக்கொண்டார். இதனால் இப்போது தலைவராக போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது.

தேர்தல்
இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. . 71 வயது நிரம்பிய மூத்த தலைவரான அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசோக் கெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர். இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். மத்திய சுற்றுலா மற்றும் விமான துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இதற்கு முன் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தவரும் அசோக் கெலாட்தான்.

நெருக்கம்
ஜி 23 தலைவர்களுக்கும் இவர் எதிரானவர். அசோக் கெலாட் வந்தால் கட்சியில் நேரு குடும்பத்திற்கான மதிப்பும் அப்படியென்ன இருக்கும், அதே சமயம் வியூக ரீதியாகவும் கட்சி வலிமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு எம்பி சசி தரூர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங். தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட சோனியா காந்தி சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அசோக் கெலாட் vs சசி தரூர் இடையே கடுமையான நிலவ வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசி தரூர்
சசி தரூர் திருவனந்தபுரம் எம்பியாக இருக்கிறார். இவர் முன்பே தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தாக தகவல்கள் வந்தன. காங்கிரஸ் கட்சியில் சோனியா - ராகுலுக்கு எதிராக இருக்கும் ஜி 23 தலைவர்களில் இவரும் ஒருவர். சோனியாவின் தலைமைக்கு எதிராக இவர் பேசி வந்தார். இந்த நிலையில்தான் இவர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இவர் கடந்த திங்கள் கிழமை பிற்பகல் சோனியா காந்தியை சந்தித்து தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக கூறி உள்ளார். அதற்கு சோனியா காந்தியும் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

மோதல்
கட்சியில் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று விரும்பும் நிர்வாகிகள், அவருக்கு நெருக்கமான அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் மாற்றம் வேண்டும் என்றும் விரும்பும் தலைவர்கள் சசி தரூருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மாபெரும் மாற்றங்களை எதிர்நோக்கி உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் முடிவுகளில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications