திருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது விபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம்
Recommended Video

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் துலாபாரம் கொடுத்த போது இரும்புக் கம்பி தலையில் விழுந்து அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் காயமடைந்தார்.
கேரள மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகிறது.
இருமுறை எம்பியாக இருந்த சசிதரூர், திருவனந்தபுரம் தொகுதியின் எம்பி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

துலாபாரம்
இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தவர்கள் விஷு வருடத்தை கொண்டாடுவது வழக்கம். அதன்படி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர். அந்த வகையில் கழக்கூட்டம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட சசிதரூர், தம்பனூரில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு துலாபாரம் கொடுத்தார்.

எடைக்கு நிகர்
துலாபாரம் என்பது எடைக்கு எடை காசோ, பணமோ, பொருளோ, பாத்திரமோ, தங்கமோ, வெள்ளியோ அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பது. அது போல் இவர் தனது எடைக்கு நிகராக வாழைப்பழத்தை கொடுத்தார்.

சிகிச்சை
அப்போது தராசின் இரும்பு கம்பி சசிதரூரின் தலையில் விழுந்தது. இதையடுத்து அவருக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரபரப்பு
பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications