இடுக்கி அணை திறப்பால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.. தமிழக அரசுதான் காரணம்..கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கேரள அரசு இடுக்கியில் உள்ள செருதோணி அணையை இன்று அதிகாலை திறந்தது.
இந்தியாவில் உள்ள மிகப் பழமையான அணைகளில் ஒன்று முல்லைப்பெரியாறு அணை. கேரளாவில் பெய்யும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் உள்ள போதிலும், அந்த அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அணையில் இருந்து நீரைத் திறக்கும் முடிவைத் தமிழக அரசு அதிகாரிகளே எடுத்து வருகின்றனர்.

இடுக்கி அணை திறப்பு
இந்தச் சூழலில் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து நேற்று முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கேரள அரசு இடுக்கியில் உள்ள செருதோணி அணையை இன்று அதிகாலை திறந்தது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இடுக்கி அணை 4 முறை திறக்கப்பட்டுள்ளது. இப்படி 3 மாதங்களில் 4 முறை இடுக்கி அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
இருப்பினும் அணை திறக்கப்படுவதை கண்டித்து இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டதை அடுத்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் அங்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டு வருகிறார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தமிழ்நாடு அரசு பொறுப்பற்ற முறையில் அணையைத் திறப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

என்ன நடந்தது
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 141.90 அடியை எட்டியதை அடுத்து, இரவு 7.45 மணியளவில் அணையின் மதகுகளைத் திறந்தனர். இரவு 10 மணிக்கு அணையின் மூன்று மதகுகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அங்கு வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடுக்கியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரள முதல்வர்
முன்னதாக இது தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த வாரம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 5,700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை (டிச.2) 8,017 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இரண்டு முறையும் போதிய முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து நீர் திறந்துவிட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அணையில் இருந்து நீரைத் திறக்க திட்டமிட்டால், அதற்குத் தகுந்தபடி திட்டமிட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய எச்சரிக்கையை வழங்க வேண்டும். அதன் பின்னரே அணையில் இருந்து நீரைத் திறக்க வேண்டும் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்,
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications