நீண்ட நகங்கள் கொண்ட பெண்ணை எனக்கு பிடிக்கும்! நடிகையிடம் அத்துமீறிய மலையாள நடிகர் சித்திக் ராஜினாமா
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் சித்திக் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், சித்தக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லாலிடம், சித்திக் வழங்கினார்.
மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் வந்த நிலையில் நடிகர், இயக்குநர், கேரள மாநில சலசித்ரா அகாதெமியின் தலைவருமான ரஞ்சித் பாலியல் முறைகேடு புகாரில் சிக்கியதை அடுத்து அந்த மாநில பொதுச் செயலாளர் சித்திக் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் சித்திக் மீது நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளார். அதில் நடிகர் சித்திக் அவரது மகன் நடிக்கும் தமிழ் படத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். சித்திக் நடிப்பில் வெளியான ஒரு படத்தின் முன்னோட்டம் நடந்தது. அது முடிந்ததும் என்னை திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள்.
அங்கு சித்திக் என்னிடம் அட்ஜஸ்ட் செய்ய தயாரா என நேரடியாகவே கேட்டார். அப்போது எனக்கு 21 வயது என்பதால் அவர் கேட்டதற்கான அர்த்தம் புரியவில்லை. அப்படி என்றால் என்ன என கேட்டதற்கு நடிகர் சித்திக், "நீண்ட நகங்களை கொண்ட பெண்களை எனக்கு பிடிக்கும்" என கூறி, என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.
ஒரு மணி நேரம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து, "இதை வெளியே சொன்னால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" என பேசினார். சித்திக்கிற்கு ஆதரவாக நிறைய பேர் இருக்கிறார்கள். அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார், அவருக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சினை நடந்தால் சும்மா இருப்பாரா, திரையுலகில் இப்படி முகமூடி அணிந்து திரியும் நபர்களை பற்றி நினைக்கும் போது வெட்கப்படுகிறேன் என அந்த நடிகை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான சித்திக், இன்று மலையாள திரையுலகத்தின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மா அமைப்பின் தலைவர் மோகன்லாலிடம் சமர்ப்பித்துள்ளார்.
மலையாள நடிகர் திலீப் குமார், தமிழ், மலையாள படங்களில் நடித்த நடிகை ஒருவரை காரில் கடத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பெயரில் திலீப் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அந்த ஆண்டே நிறைய நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக கேரள அரசிடம் புகார் அளித்தனர். அதாவது மலையாள திரையுலகமே 15 பேரின் பிடியில் சிக்கியிருப்பதாகவும் அவர்களிடம் அட்ஜெஸ்ட் செய்தால் மட்டுமே தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த கமிஷன், பல்வேறு நடிகைகளிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. ஆனால் அது தற்போது வரை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அறிக்கையை மலையாள நடிகைகள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு தங்களது பெயர் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்குமா என அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உண்மையில் மலையாள திரையுலகம் ஒரு 15 பேர் கொண்ட மாபியாக்களின் கையில் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
அரை குறை ஆடையுடன் நடிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நெருக்கமான, முத்தமிடும் காட்சிகளை அதிகம் வைப்பதாகவும் நடிகைகள் குற்றம் கூறியிருந்தனர். அது போல் தன்னை கட்டிப்பிடிக்க ஒரு நடிகர் 17 முறை ரீடேக் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நடிகர் திலகனின் மகள் சோனியாவும் ஹேமா கமிஷன் அறிக்கையை ஆமோதித்தார். அவர் கூறியிருப்பதாவது: அந்த 15 பேர்தான் மலையாள சினிமாவை ஆட்டி படைக்கிறார்கள். எனது அப்பா திலகன் இந்த தவறுகளை தட்டி கேட்டதால் அவரை திரையுலகினர் எதிர்த்தனர். இந்த நிலையில் ஒரு நடிகர் தனது தந்தையின் இறப்புக்கு பிறகு, தன்னிடம் போனில் பேசியதாகவும், அப்போது தன்னை மகளே என அழைத்துவிட்டு பிறகு தன்னிடம் பாலியல் ரீதியாக எதையோ எதிர்பார்ப்பது போலவும் பேசியிருந்தார். இது தனக்கு பேரதிர்ச்சியாக இருந்ததாகவும் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications