தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றியது... மழைப்பொழிவு 43 சதவீதம் குறைந்தது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இடுக்கியில் இயல்பை காட்டிலும் 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது.

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 8-ந்தேதி தொடங்கியது. முதலில் தீவிரம் காட்டிய மழை அதன் பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது.

Southwest monsoon is 43 Percentage less in Kerala

Recommended Video

    நெல்லை: தொடங்கியது தென்மேற்கு பருவ மழை... அதிகரித்தது அணையின் நீர் மட்டம்...

    இதே போல், தென்மேற்குப் பருவமழை தொடங்கியபோது, நாட்டின் பல்வேறு இடங்களில் அதிக மழை பெய்தது. கூடுதலாக இருந்த மழைப் பொழிவு, தற்போது பற்றாக்குறையாக மாறியுள்ளது. வாயு புயல் உருவானதால் தென்மேற்கு பருவமழை பெய்வதில் பாதிப்பை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

    கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று (10-ந்தேதி) வரை பெய்த தென்மேற்கு பருவமழையை வைத்து பார்க்கும்போது இது சராசரியை விட 43 சதவீதம் குறைவான மழைப்பொழிவு என்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக இந்த கால கட்டத்தில் 890.9 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 510.2 மில்லி மீட்டர் மழை தான் பெய்துள்ளது.

    கேரள மாநிலத்திலேயே மிகவும் குறைவாக மழை பெய்துள்ள இடம் இடுக்கியாகும். இங்கு 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் சராசரியாக 394.5 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இதுவரை 302.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை காட்டிலும் 23 சதவீதம் குறைவாகும். அதே போல வயநாடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதம் மழை குறைந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+