மனிதர்களை மதிக்கும் மகான்.. டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்து வணங்கிய எஸ்பிபி.. வைரலாகும் வீடியோ
திருவனந்தபுரம்: தன்னை டோலியில் சுமக்கும் மனிதர்களையும் மனிதராக மதித்து எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது ஒவ்வொருவரின் காலில் விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
பிறப்பு முதல் இறப்பு வரை இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதுதான் முக்கியமே. என்னதான் பணம், புகழ், பெயர் என விண்ணை தொட்டாலும் அடக்கம், முன் கடந்து வந்த பாதையை யாரும் மறக்கக் கூடாது என்பது முக்கியமானது.
அதிலும் சக மனிதர்களை மனிதர்களாக நினைக்கும் மனிதநேயம் வெகு சிலருக்கே இருக்கும். என்னதான் பெயரும், புகழும் பணமும் கண்ணை மறைத்தாலும் மனிதநேயத்தை மட்டும் ஒருவர் இழக்கக் கூடாது.

புகழின் உச்சம்
அந்த வகையில் திரைத்துறையில் நேற்று மறைந்த எஸ்பிபி உலகளாவிய புகழை பெற்றிருந்தாலும் எளிமையின் சிகரமாக இருந்தார் என அவருடன் பழகியவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்கள். புகழின் உச்சத்தில் இருந்த போதும் சரி தன்னுடன் பாடுபவர்கள் புதியவர்களோ அறிமுகமில்லாதவர்களோ பிரபலமடையாதவர்களோ இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர் கொடுக்காமல் இருக்க மாட்டார்.

ஆர்கெஸ்டிரா
எந்த கச்சேரிக்குச் சென்றாலும் அங்கு வாசிக்கும் ஆர்கெஸ்டிராவில் இருப்போருக்கு உரிய மரியாதையை கொடுப்பார். அது போல் அவர்களது பெயரையும் உச்சரிப்பார். தான் பாடி முடித்தவுடன் ரசிகர்கள் கைதட்டல்களை முடித்த பின்னர், அந்த ஆர்கெஸ்ட்டிராவும் நன்றாக வாசித்தார்கள். அவர்களையும் பாராட்டுங்கள் என கேட்பாராம்.

பொறாமை
போட்டி, பொறாமை இல்லாமல் தனக்கு கிடைக்க வேண்டிய சான்ஸ்களையும் விட்டுக் கொடுப்பாராம். இசை கேசஸ்ட்டுகளில் தனது பெயர் இடம்பெறாவிட்டாலும் அதற்காக கோபித்து கொள்ளாத எளிமையான மனிதர் என அனைவரும் புகழாரம் சூட்டுகிறார்கள். நுங்கம்பாக்கத்திலும் தாமரைப்பாக்கத்திலும் அவருக்காக குவிந்த கூட்டம் அவரது பாட்டுக்கு மட்டுமல்ல மனித நேயத்திற்காகவும்தான் என்பது கண்கூடு.

பானை
எஸ்பிபியின் குணாதிசயம் குறித்து அனைவரும் கூறி வரும் நிலையில் அதற்கு ஒரு சான்றாக ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப அந்த வீடியோ உள்ளது. அந்த வீடியோ எஸ்பிபியின் சபரிமலை கோயில் பயணம் என்கிறார்கள்.

டோலி ஊழியர்கள்
ஆனால் அதுதான் என உறுதியாக தெரியவில்லை. தன்னால் ஏற முடியாததால் டோலியில் செல்ல முடிவு செய்த எஸ்பிபி தன்னை சுமக்கும் டோலி ஊழியர்களின் காலில் விழுந்து வணக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அது போல் தனது மகன் சரணையும் அவ்வாறு காலில் விழுமாறு சொல்கிறார்கள். மனிதர்களை மதிக்கும் மகான் என புகழாரம் சூட்டுகிறார்கள். காசு கொடுக்கிறோம் தூக்குகிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல் அவர்களும் மனிதர்களே என நமக்கு உணர்த்தியவர் பாடும் நிலா பாலு!
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications