Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடைகளில் இனி கோதுமைக்கு பதிலாக ராகி.. அதிரடியை கையில் எடுத்த அரசு.. சபாஷ் காரணம்

ரேஷன் கடைகளில் கோதுமைக்கு பதிலாக ராகி வினியோகிக்க கேரள மாநிலம் முடிவு செய்துள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ரேஷன் கடைகளில் கோதுமைக்கு பதில் ராகி, கொண்டை கடலை வினியோகிக்க, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் குறைவான விலையில் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று வருகின்றனர்...

மேலும் அந்தந்த மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களையும், ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கி வருகிறது.

அந்த வகையில், கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. ஆனால், இதில் சில மாற்றங்களை செய்ய, மாநில அரசு முடிவு செய்துள்ளதாம்.. காரணம், கேரளா மாநிலத்தை பொறுத்தவரை, இயற்கை சீற்றங்களில் அடிக்கடி சிக்கி கொள்ளும்.. கொரோனா முதல், வெள்ளம், புயல் பாதிப்பு வரை கேரள மாநிலம் பாதிக்கப்படும்..

 மலைகிராமம்

மலைகிராமம்

அந்தவகையில், இப்போது, குரங்கு அம்மை பரவி கொண்டு வருகிறது.. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக இந்த குரங்கு அம்மை பரவி வருகிறது. இதுவரை 2 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க கேரள சுகாதாரத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது... அதன் ஒருபகுதியாக, அம்மாநில சுகாதார துறையினர் மலையோர மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்போதுதான், அந்த பகுதி மக்களுக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது... இதனை உடனடியாக சரி செய்ய, மலையோர மக்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகி, பருப்பு மற்றும் கொண்டை கடலை வகை உணவுகளை வழங்க ஆய்வு குழுவினர் கேரள அரசுக்கு சிபாரிசும் செய்துள்ளனர்.. அந்த சுகாதார குழுவினர் அளித்த ஆய்வறிக்கையின்படி கேரள அரசு மலையோர கிராம மக்களுக்கு ராகி வகை உணவு வகைகளை வினியோகிக்க முடிவு செய்துள்ளது.

வயநாடு

வயநாடு

இதையடுத்து, கோதுமைக்கு பதிலாக ராகி, பருப்பு மற்றும் கொண்டை கடலை வகை உணவினை ரேசன் மூலம் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளது. முதல் கட்டமாக இந்த உணவு பொருள்களை கேரளாவின் வயநாடு, இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் அறிமுகம் செய்யவும் கேரள அரசு திட்டமிட்டு உள்ளது... இந்த 3 மாவட்டங்களில்தான், ரத்த சோகை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டதாம்..

 பால் - சிற்றுண்டி

பால் - சிற்றுண்டி

எனவே இந்த மாவட்டங்களில் கோதுமைக்கு பதில் ரேசன் கடைகளில் ராகி வினியோகிக்க தேவையான ராகி மற்றும் கொண்டை கடலை வகைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது.. அதேபோல, நம் தமிழ்நாட்டிலும், முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்து வருகிறது.

 எலும்பு வளர்ச்சி

எலும்பு வளர்ச்சி

தற்போது, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் பசியின்றி இருக்கவும், ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறைபாட்டை போக்கவும், சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால், குழந்தைகளின் கண் பார்வைக்கும், எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கும், அறிவு கூர்மைக்கும், பிரதான உணவு பால் ஆகும்.. 100 மி.லி, பாலில், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ள நிலையில், பள்ளிக்குழந்தைகளுக்கு, சிற்றுண்டி திட்டத்தில் பாலையும் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+