Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவனந்தபுரம் அருகே கணவருக்கு மாணவியை விருந்தாக்கிய இளம்பெண்.. இருவரையும் சிக்க வைத்த ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கணவருக்கு மாணவியை விருந்தாக்கிய இளம்பெண் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை கண்டுபிடித்த கணவன், மனைவியிடம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், சிறுமியை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த மனைவி, 15 வயது சிறுமியை ஏமாற்றியதுடன், கணவருக்கு விருந்தாக்கியுள்ளார். இருவரும் கைதாகி உள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவு என்பது ஆண் அல்லது பெண் எனஇருவருக்குமே கத்தி மேல் நடப்பது போல் தான். என்றாவது ஒரு நாள் தங்கள் துணைக்கு தெரிய வரும் போது, பூகம்பமே வெடிக்கிறது. கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கையும் களவுமாக பிடித்து அடிக்கிறார்கள். இது குடும்ப விவகாரம் என்பதால் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

Thiruvananthapuram crime kerela

அடிதடி மற்றும் பெரிய பிரச்சனை என்றால் மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள். அதேநேரம் திருமணத்தை மீறிய உறவு வெளியில் உள்ளவர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்து மிரட்டுபவர்களை பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை கொடுப்பதும் உண்டு. இங்கு திருமணத்தை மீறிய உறவை அறிந்த கணவனுக்கு அவரது மனைவியே 15 வயது மாணவியை விருந்தாக அனுப்பி வைத்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் சரத் என்பவருடைய மனைவி நந்தா (24). இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்கள். சந்தோஷமாக செல்ல வேண்டிய வாழ்க்கையில் திருமணத்தை மீறிய உறவால் சிக்கல் ஏற்பட்டத. நந்தாவுக்கும், வேறு ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை ஒரு கட்டத்தில் அறிந்த சரத், நந்தாவை திட்டியதுடன், சேர்ந்து வாழ முடியாது பிரிந்துவிடலாம் என்று மிரட்டி வந்துள்ளார்.

அதேநேரம் மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் ஒரு சிறுமியிடம் நான் உல்லாசமாக இருக்க நீ ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற விபரீத ஆசையை மனைவியிடம் வெளிப்படுத்தி உள்ளார. முதலில் இதற்கு முடியாது என்று சொன்ன நந்தா, கணவர் மிரட்டியதால் வேறுவழியின்றி இதற்கு சம்மதம் தெரிவித்தாராம். அதன்படி நந்தா, 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி கணவருடன் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை பயன்படுத்திய சரத், அந்த சிறுமியை சில வருடமாக அவ்வப்போது அழைத்து அத்துமீறி வந்துள்ளார் .

10ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியின் நடத்தையில் அங்கு பணியாற்றும் ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை தனியாக அழைத்துச் சென்று விசாரித்த போது, தன்னை சரத் என்பவர் தன்னிடம் அடிக்கடி அத்துமீறியது பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து ஆற்றிங்கல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சரத், நந்தா ஆகியோரை கைது செய்தார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+