திருவனந்தபுரம் அருகே கணவருக்கு மாணவியை விருந்தாக்கிய இளம்பெண்.. இருவரையும் சிக்க வைத்த ஆசிரியை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கணவருக்கு மாணவியை விருந்தாக்கிய இளம்பெண் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை கண்டுபிடித்த கணவன், மனைவியிடம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், சிறுமியை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த மனைவி, 15 வயது சிறுமியை ஏமாற்றியதுடன், கணவருக்கு விருந்தாக்கியுள்ளார். இருவரும் கைதாகி உள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவு என்பது ஆண் அல்லது பெண் எனஇருவருக்குமே கத்தி மேல் நடப்பது போல் தான். என்றாவது ஒரு நாள் தங்கள் துணைக்கு தெரிய வரும் போது, பூகம்பமே வெடிக்கிறது. கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கையும் களவுமாக பிடித்து அடிக்கிறார்கள். இது குடும்ப விவகாரம் என்பதால் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

அடிதடி மற்றும் பெரிய பிரச்சனை என்றால் மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள். அதேநேரம் திருமணத்தை மீறிய உறவு வெளியில் உள்ளவர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்து மிரட்டுபவர்களை பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை கொடுப்பதும் உண்டு. இங்கு திருமணத்தை மீறிய உறவை அறிந்த கணவனுக்கு அவரது மனைவியே 15 வயது மாணவியை விருந்தாக அனுப்பி வைத்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் சரத் என்பவருடைய மனைவி நந்தா (24). இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்கள். சந்தோஷமாக செல்ல வேண்டிய வாழ்க்கையில் திருமணத்தை மீறிய உறவால் சிக்கல் ஏற்பட்டத. நந்தாவுக்கும், வேறு ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை ஒரு கட்டத்தில் அறிந்த சரத், நந்தாவை திட்டியதுடன், சேர்ந்து வாழ முடியாது பிரிந்துவிடலாம் என்று மிரட்டி வந்துள்ளார்.
அதேநேரம் மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் ஒரு சிறுமியிடம் நான் உல்லாசமாக இருக்க நீ ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற விபரீத ஆசையை மனைவியிடம் வெளிப்படுத்தி உள்ளார. முதலில் இதற்கு முடியாது என்று சொன்ன நந்தா, கணவர் மிரட்டியதால் வேறுவழியின்றி இதற்கு சம்மதம் தெரிவித்தாராம். அதன்படி நந்தா, 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி கணவருடன் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை பயன்படுத்திய சரத், அந்த சிறுமியை சில வருடமாக அவ்வப்போது அழைத்து அத்துமீறி வந்துள்ளார் .
10ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியின் நடத்தையில் அங்கு பணியாற்றும் ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை தனியாக அழைத்துச் சென்று விசாரித்த போது, தன்னை சரத் என்பவர் தன்னிடம் அடிக்கடி அத்துமீறியது பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து ஆற்றிங்கல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சரத், நந்தா ஆகியோரை கைது செய்தார்கள்.
-
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications