படகு கிளம்பி அரை கி.மீ.தான் போயிருக்கும்.. கீழ் பகுதியில் சிக்கிய குழந்தைகள் அலறல்! ஐ விட்னஸ் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியான சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் விளக்கியுள்ளார்.
கேரளா மாநிலம் மலப்புரத்தை அடுத்த தானூர் அருகே ஓட்டும்புரத்தில் நேற்று இரவு தூவல் தீர்த்தம் ஆற்றில் 40 பேருடன் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமான பரப்பனங்காடி கடற்கரை பகுதி அருகே சென்ற போது அந்த படகு திடீரென தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இதுவரை 22 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள் ஆவர். படகு கவிழ்ந்ததும் அங்கிருந்த மீனவர்கள் சிலர் நீச்சல் அடித்து சிலரை காப்பாற்றியுள்ளனர். கேரளாவில் கோடை விடுமுறைக்காக சுற்றுலா பயணிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
காயமடைந்தவர்கள் திரூர், தானூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து நடந்தவுடன் ஷஃபீக் எனும் இளைஞர் தண்ணீரில் நீந்தி சிலரை காப்பாற்றினார். அவர் மனோரமா செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அந்த படகு டபுள் டெக்கர் படகாகும். அதில் இரு கதவுகள் இருந்தன.

ஆனால் படகு தலைக்குப்புற கவிழ்ந்ததும் வெளியே வர முடியாமல் நிறைய பேர் சிக்கிக் கொண்டனர். ஆற்றிலிருந்து படகு புறப்பட்ட அரை கிலோமீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்தது. சிறிய சிறிய குழந்தைகள் உள்பட நிறைய பேர் இருந்தனர். என்னால் முடிந்தவரை சிலரை காப்பாற்றினேன். ஆனால் கீழ் டெக்கில் இருந்த பலர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். குறிப்பாக குழந்தைகள் வெளியே வர அவதிப்பட்டனர்.
படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றியதும் பாதுகாப்பு அம்சங்களை கொடுக்காததும்தான் விபத்திற்கு காரணம் என சொல்கிறார்கள். மேலும் படகு உரிமையாளர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலா படகுகளுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றியதும் இந்த விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் விபத்து நடக்கும் போதெல்லாம் பாதுகாப்பு பற்றி பேசுவது பின்னர் அதுகுறித்த கண்டுகொள்ளாமல் விடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications