மெட்ரோ ரயில் தெரியும்! அதென்ன வாட்டர் மெட்ரோ! இனி ஜாலியா மிதந்துகிட்டே போகலாம்! நாட்டில் முதல்முறை
திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ என்ற புதிய வகையிலான மெட்ரோவை பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார். அதென்ன வாட்டர் மெட்ரோ அது எப்படி பயன் தரும் என்பதைப் பார்க்கலாம்.
உலகளவில் இந்தியா மிக வேகமாக வளரும் நாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல நமது நாட்டில் மக்கள் தொகை லெவலில் வளர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் வாகன நெருக்கடியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சென்னை போன்ற நகரங்களில் நீங்கள் வெளியே சென்றால் நிச்சயம் டிராபிக்கில் சில மணி நேரம் வரை நிற்க வேண்டி இருக்கும். சென்னை மட்டுமின்றி நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்களில் இதை நிலை தான்.
பொது போக்குவரத்து: நாம் என்ன தான் புதிய சாலைகள் அமைத்து, பாலங்களைக் கட்டினாலும் கூட டிராபிக் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். மக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைத்தால் மட்டுமே டிராபிக் பிரச்சினை குறையும். ஏனென்றால் பொதுமக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், சாலைகளில் வாகன நெரிசல் குறையும். மேலும், காற்று மாசும் கணிசமாகவே குறையும். இதனால் பல ஐரோப்பிய நகரங்கள் பொது போக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் கூட இப்போது பொது போக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக பல்வேறு நகரங்களிலும் மெட்ரோ ரயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. டிராபிக்கை சமாளிக்கலாம், சொன்ன நேரத்தில் செல்ல முடியும், வானிலை பிரச்சினை இல்லை உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் அதையே பயன்படுத்துகிறார்கள். மெட்ரோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
வாட்டர் மெட்ரோ: இதனிடையே இந்தியாவிலேயே முதல்முறையாகக் கேரளாவில் வாட்டர் மெட்ரோவை கேரள மாநிலம் கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இது அப்பகுதியில் பொருளாதாரத்தை பூஸ்ட் செய்யப் பெரியளவில் உதவும். சரி மெட்ரோ ரயில் குறித்துத் தெரியும். அதென்ன வாட்டர் மெட்ரோ என்கிறார்களா.. வாருங்கள் வாட்டர் மெட்ரோ குறித்து A to Z தெளிவாகப் பார்க்கலாம்.

இந்த வாட்டர் மெட்ரோ என்பது இந்தியாவிலேயே இப்போது தான் முதல்முறையாகக் கொண்டு வரப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "வழக்கமான மெட்ரோ அமைப்பைப் போலவே அதே அனுபவம் மற்றும் எளிதான பயண வசதியைத் தரும் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு தான் இந்த வாட்டர் மெட்ரோ" என்கிறார்கள்.கொச்சி போன்ற நகரங்களுக்கு இந்த வாட்டர் மெட்ரோ பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும்.
எவ்வளவு செலவு: துறைமுக நகரமான கொச்சியில் சுமார் ரூ.1,136.83 கோடி செலவில் இந்த மெட்ரோ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ அமைப்பு கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கிறது. கொச்சி நகரின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், "உலகத் தரம் வாய்ந்த கொச்சி வாட்டர் மெட்ரோ திறக்கப்பட உள்ளது. இது கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் கேரளாவின் கனவுத் திட்டமாகும். 78 மின்சார படகுகள் மற்றும் 38 முனையங்களுடன் 1,136.83 கோடி செலவில் கேரள அரசு மற்றும் ஜெர்மனி நிறுவனத்தின் நிதியில் இது கட்டப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளனர்.
ஏசி படகுகள்: திட்டத்தின் முதல் கட்டத்தில், அங்குள்ள உயர் நீதிமன்ற- வைபின் டெர்மினல்களில் இருந்து வைட்டிலா- காக்கநாடு டெர்மினல்களுக்கு வரை சேவைகள் இருக்கும். அதன் பின்னர் படிப்படியாக இத்திட்டம் முழுமையாக நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ என்பது குளிரூட்டப்பட்ட படகுகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உதவும். மேலும், இதன் கட்டணம் குறைவாகவே இருக்கும் என்றும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்காமல் மக்கள் அந்தந்த இடங்களை அடையவும் இது மிகப் பெரியளவில் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொச்சி கேரளாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் ஒன்றாகும்.. இந்த வாட்டர் மெட்ரோ போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நீர்நிலைகள் மூலம் எளிய போக்குவரத்தை முறையை உருவாக்கவும் உதவும். இதில் பயன்படுத்தும் படகுகள் பேட்டரி மூலமான ஹைபரிட் படகுகள் மூலம் இயக்கப்படும்.
சூப்பர் அனுபவம்: இந்த வாட்டர் மெட்ரோவில் 78 கிமீ நீளமுள்ள 15 வழித்தடங்கள் மெட்ரோ இயக்கப்படும். குறைந்த செலவில், மக்களுக்குச் சவுகரியமான ஒரு அனுபவத்தை இது தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி மெட்ரோவை பயன்படுத்த இருக்கும் "கொச்சி 1" கார்டைப் பயன்படுத்தி கொச்சி மெட்ரோ மற்றும் வாட்டர் மெட்ரோ என இரண்டிலும் பயணிகள் பயணம் செய்யலாம். மேலும், டிஜிட்டல் முறையிலும் டிக்கெட் எடுத்தும் பணிக்கலாம். இத்திட்டம் அங்கிருக்கும் சுமார் ஒரு லட்சம் பேருக்குப் பெரியளவில் பயன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications