அரசு பஸ்சில் தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்.. பெண் யூடியூபர் செய்த துணிச்சலான காரியம்
திருவனந்தபுரம்: கேரள அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது, தனது தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை, இளம்பெண் ஒருவர் கன்னத்தில் பளார் விட்ட துணிச்சல் சம்பவம் அரங்கேறியுள்ளது. உங்க வீட்டில் பொண்ணுங்க இல்லையா? எனக்கேட்டு அந்த நபரை சரமாரிய கேள்வி எழுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பெண்கள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக சிறுமிகளிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபடும் கயவர்களால் சிறுமிகளை தனியாக எங்கும் வெளியில் அனுப்பவதற்கு பெற்றோர்கள் அச்சப்பட்டு வருகிறார்கள்..

சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ
பள்ளி சென்று வரும் போது கூட இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அண்மையில் திருவள்ளூரில் பள்ளி முடிந்து தனியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சிறுமியை பின்னால் இருந்து வந்து தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதேபோல் அரசு பஸ்களில் செல்லும்போது, ரயில்களில் செல்லும் போது என பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இந்த நிலையில் கேரளாவில் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்து போன் சிறுமியின் சகோதரி முதியவரை கன்னத்தில் பளார் என அறைந்து, உங்கள் வீட்டுலயும் பெண்கள் இருக்கிறார்கள் தானே என்று திட்டி தீர்த்துள்ளார். தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை துணிச்சலாக தாக்கி, சரமாரியாக கேள்வி எழுப்பும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி உள்ளன.
சிறுமியை தொட்டு பாலியல் சீண்டல்
அரசு பஸ் ஒன்றில் சிறுமி மற்றும் அவரது மூத்த சகோதரி இருவரும் சென்றுள்ளனர். 3 இருக்கை கொண்ட அந்த அரசு பஸ்சில் முதியவர் ஒருவரும் அமர்ந்துள்ளார். ஜன்னல் ஓரத்தில் சிறுமியின் சகோதரியும், நடுவில் சிறுமியும், அதற்கு அடுத்ததாக முதியவரும் இருந்துள்ளார். சிறுமி அருகில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி கையால் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இதுபற்றி அக்காவிடம் சொல்லியிருக்கிறார்.
சாரிம்மா.. மன்னித்துவிடு
அவரும் பதறாமல் நிதானமாக அந்த முதியவர் செய்யும் லீலைகளை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண் முதியவரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். மேலும் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா?.. அவர்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வாயா என சரமாரியாக திட்டி தீர்த்துள்ளார். இதனால் அதிர்ந்து போன முதியவர் சாரிம்மா.. என்னை மன்னித்துக்கொள் என்று இரு கை எடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
அந்த பெண் பிரபல யூடியூபர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த பெண் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஓடும் பேருந்தில் தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். பெண் கொடுத்த இந்த வீடியோவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications