அம்மாவின் கழுத்தை அறுத்தேன்.. துண்டு துண்டாக வெட்டினேன்.. பீச்சில் கொண்டு போய்.. பதற வைத்த மகன்!
தாய், நண்பனை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்
கோழிக்கோடு: அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று ஃபேனில் தொங்க விட்டேன்.. இஸ்மாயிலை கத்தியால் குத்தி கொன்று, தலை, உடம்பு, கை, கால்களை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.. மொத்தமாக சடல குவியலை மூட்டை கட்டிக் கொண்டு பீச்சில் போட்டுவிட்டேன்" என்று தாய், நண்பனை கொன்ற நபர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
கோழிக்கோடு அருகே முக்கம் கிழக்கு மணாஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயவள்ளி.. ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரர். இவரது மகன் விர்ஜூ.. 53 வயதாகிறது.. அடிக்கடி தன் தாய் ஜெயவள்ளியை மிரட்டி சொத்துக்களை எழுதி வந்தார்.
ஒரு கட்டத்தில் சொத்துக்களை தர முடியாது என்று ஜெயவள்ளி கண்டிப்பாக சொல்லவும், அவரை கொல்ல முடிவு செய்தார் மகன்.

இஸ்மாயில்
இந்த கொலையை செய்வதற்காக நண்பர் இஸ்மாயிலிடம் உதவி கேட்டார்.. அதற்கு இஸ்மாயில் 2 லட்சம் தந்தால் கொலை செய்வதாக தெரிவிக்கவும், அதற்கு விர்ஜு சம்மதம் சொன்னார். அதன்படி, கடந்த 2014-ம் வருடம், மார்ச் 5-ந் தேதி தூங்கி கொண்டு இருந்த ஜெயவள்ளியின் கழுத்தை விர்ஜூவும், இஸ்மாயிலும் சேர்ந்து நெரித்து கொன்றனர்.

நெரித்து கொலை
அதன்பிறகு, சடலத்தை ஃபேனில் தொங்க விட்டு தற்கொலை என்று டிராமா செய்தனர். போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2017-ல் அங்கிருந்த பீச்சில் இஸ்மாயில் பிணமாக கிடந்தார். தலை தனி, முண்டம் தனி, கை கால்கள் தனித்தனியாக விழுந்து கிடந்தன.. அவற்றை கைப்பற்றினாலும், இறந்தது யார் என்று போலீசாருக்கு அடையாளம் தெரியவில்லை.

நண்பன் விர்ஜூ
பழைய கிரிமினல்கள் ஃபைல்களை கொண்டு கைரேகை வைத்துதான், இப்படி கொடூரமாக கொல்லப்பட்டது இஸ்மாயில் என்று முடிவு செய்தனர். எவ்வளவோ முயன்றும், கொலையாளியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் கியூ பிராஞ்ச் போலீசார் இதனை கையில் எடுத்தனர்.. நண்பர் விர்ஜூவிடமும் விசாரணை ஆரம்பமானது.. ஆனால் அவர் திடுதிப்பென்று தலைமறைவாகவும் சந்தேகம் உறுதியானது.. இப்போது 2 வருட தேடலுக்கு பிறகு விர்ஜு போலீசில் சிக்கி உள்ளார். அப்போது அவர் வாக்குமூலத்தில் சொன்னதாவது:

அரிவாள்
"என் அம்மா கொல்ல இஸ்மாயிலிடம் உதவி கேட்டேன்.. ரூ. 2 லட்சம் கேட்டார்.. என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை.. பணம் தரும்படி ஓயாமல் தொல்லை செய்யவும்தான் இஸ்மாயிலையும் கொல்ல முடிவு செய்தேன்.. சம்பவத்தன்று வீட்டுக்கு வருமாறு சொன்னேன்... தண்ணி அடிக்கலாம் என்றதும் சரி என்றார்.. ஃபுல் போதையில் இஸ்மாயில் இருக்கும்போது, கத்தியால் குத்திவிட்டேன்.. பிறகு அரிவாளை வைத்து, தலை, உடலை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.. ஒரு மூட்டையில் உடற்பாக குவியலை கட்டி எடுத்து, பீச் பக்கமாக போட்டு விட்டு வந்துவிட்டேன்" என்றார். இதையடுத்து விர்ஜு கைதாகி உள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications