இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம்
காத்மண்டு: உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்று நேபாளம்.. இந்த நாட்டின் முக்கிய பொருளாதாரமே சுற்றுலா பயணிகளின் வருமானம் தான்.. இந்தியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்கிறார்கள்.. உத்தரப்பிரதேசத்திற்கு அபபடியே மேலே உள்ள நேபாளம் இமயலையில் அமைந்துள்ள நாடு.. இங்கு பொது இடத்தில் குட்கா துப்பிய இந்தியச் சுற்றுலாப் பயணிகளை நேபாளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அந்த நப தட்டிக்கேட்டதுடன் குட்காவை துப்பியவர்களை சுத்தம் செய்யவும் வைத்தார்.
உலகின் அழகான நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கு பலரும் சுற்றுலா செல்கிறார்கள்.. அங்குதான் எவரெஸ்ட் சிகரம் இருக்கிறது. அதனால் மலையேற வருபவர்களால் வருமானம் நேபாளத்திற்கு கொட்டுகிறது. அதேபோல் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு மற்றும் சுற்றுலாத் தலமான பொக்காரா ஆகியவை மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த சொர்க்கமாக இருப்பதால் பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நேபாளம் செல்வது மிகவும் குறைவான செலவில் ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட திருப்தி பல இந்தியர்களுக்கு கிடைக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகள் நேபாளத்தில் அதிகமாக இருக்கின்றன. இதனால் வட இந்திய மக்கள் சர்வ சாதாரணமாக நேபாளம் சென்று வருகிறார்கள்.

இது இந்தியா இல்லை
அப்படித்தான் இந்திய சுற்றுலா பயணிகள் சிலர் சென்றார்கள். அவர்கள் காரில் செல்லும் போது சாலையில் குட்கா போட்டு துப்பியுள்ளனர்.இதனை அங்கிருந்த நேபாளவாசி ஒருவர் கவனித்தார். உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்திய அந்த நபர், "இது இந்தியா இல்லை சகோதரரே... இது நேபாளம். சீக்கிரம் தண்ணீரை ஊற்றிச் சுத்தம் செய்யுங்கள்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
சுத்தம் செய்ய வைத்தார்
இதனால் மிகுந்த சங்கடத்திற்குள்ளான இந்திய சுற்றுலாப் பயணிகள், பலமுறை மன்னிப்புக் கேட்டனர். இருப்பினும், அந்த நபர் விடாமல் அவர்களைக் கொண்டே சாலையில் படிந்திருந்த குட்கா கறைகளைத் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்ய வைத்தார். இந்தச் சம்பவத்தைப் படம்பிடித்த அந்த நபர், "நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்கள்... இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து வந்துவிட்டு இங்கே வந்து அழுக்கு செய்கிறீர்களே" என்று ஆதங்கத்துடன் கூறினார். வெறும் 'சாரி' மட்டும் சொல்லிவிட்டுச் செல்லாமல், அந்த இடத்தை முறையாகச் சுத்தம் செய்யுமாறு அவர் மீண்டும் வற்புறுத்தி உள்ளார்..
சமுக வலைதளங்களில் பரபரப்பு
பல லட்சம் பேர் பார்த்த இந்த வீடியோ, பொது ஒழுக்கம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட பல சமூக வலைதளப் பயனர்கள், அந்த நேபாள நபர் செய்ததை வரவேற்றுள்ளனர். தவறைப் பார்த்தவுடன் தட்டிக்கேட்ட அவரது துணிச்சலைப் பாராட்டி உள்ளார்கள். அதேநேரம், சிலர் அந்த நபர் ஓவராக போகிறார்..இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று விமர்சிக்கிறார்கள். அத்துடன் ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஒப்பிட்டுப் பேசியது தவறு என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வெறுப்பை காட்டுகிறது
ஒரு நெட்டிசன் கூறுகையில், "நேபாள மக்கள் இந்தியாவுக்கு வந்து வேலை செய்யும்போது நாங்கள் அவர்களை அவமதிப்பதில்லை. இவர்கள் செய்தது தவறுதான், அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த நாட்டையும் குறை கூறுவது வெறுப்பையே காட்டுகிறது. விருந்தினர்களிடம் இப்படி நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது," என்று கூறியுள்ளார்.
- அதிமுக ஆட்சி இல்லையாம்.. "தமிழகத்தில் என்டிஏ அரசு அமையும்!" திட்டவட்டமாக சொன்ன பாஜக தேசிய தலைவர்
- Election: ஓட்டு போட உங்க நிறுவனத்தில் லீவ் தரலயா? உடனே புகார் அளிக்கலாம்.. எப்படி?
- சின்ன தோசை தந்த திமுக.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே
- அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல்
- பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி?
நேர்மறையாக பாருங்கள்
மற்றொரு நெட்டிசன், "இது தேசத்தின் மீதான பற்று, எனவே இதை நேர்மறையாகப் பார்க்க வேண்டும்," என்றார். இன்னொரு பயனர், "அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்டது நற்பண்பு," என்று கூறினார். மேலும் சில நெட்டிசன்கள், "அரசாங்கம் பான், புகையிலை, குட்கா மற்றும் மதுபானங்களைத் தடை செய்தால், இந்தியர்களின் பொது நடத்தை 95 சதவீதம் மேம்படும்," என்று கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் இது போன்ற பழக்கவழக்கங்கள் இந்தியர்களுக்கு ஏற்படுத்தும் 'சங்கடமான' நிலை குறித்தும், மக்களிடையே நிலவ வேண்டிய பொது ஒழுக்க உணர்வு குறித்தும் இந்தச் சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவின் மூவ்.. லாக்டவுனில் சிக்கப்போகும் இந்தியா.. இன்னைக்கு நைட்டு விஷயம் தெரிஞ்சிடும்! -
ஒடிசாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. கரண் அதானி அறிவிப்பு -
மாறப்போகிறதா இந்திய நேரம்? உஜ்ஜயினி டூ கிரீன்விச்.. மத்திய அரசின் 'மஹாகால்' பிளான் -
"உங்க நாடு சுக்கு நூறாக சிதறும்.." வாயை விட்ட பாகிஸ்தானுக்கு அவர்கள் மொழியிலேயே ராஜ்நாத் சிங் பதிலடி -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்!













Click it and Unblock the Notifications