கொடைக்கானலில் நாள் முழுக்க அன்னதானம்.. சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோயிலில் சூப்பர் வசதி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய நல்ல விஷயம் நடந்துள்ளது. குறிப்பாக கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வரப்பிரசாதமான திட்டத்தை இந்து அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்து அறநிலையத்துறை அமைச்சசர் சேகர்பாபு, பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை பொறுத்தவரை ஆண்டு முழுவதும் மிக மிக அழகான கிளைமேட் நிலவும் பகுதியாகும். சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக கொடைக்கானல் இருக்கிறது. இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான பனிபொழிவு இருக்கும். மற்ற மாதங்களில் இரவில் மட்டும் கடும் குளிர் இருக்கும். பகலில் மிக இதமான கால நிலை நிலவும். இந்த காலநிலையைஅனுபவிக்கவே சுற்றுலா பயணிகள், ஹனிமூன் ஜோடிகள் ஆண்டு முழுவதும் வருவார்கள்.

அதேபோல் கொடைக்கானலை பொறுத்தவலை காலநிலை மட்டுமல்ல... புகழ்பெற்ற நட்சத்திர ஏரி, பூங்கா, மன்னவனூர், பூம்பாறை முருகன் கோவில், குணா பாறை, பசுமை பள்ளத்தாக்கு, செட்டியார் பூங்கா, ரோஜாபூங்கா, மூங்கில் காடுகள், கோக்கர்ஸ் வாக், பேரிஜம் ஏரி, கூக்கால், வில்பட்டி, குறிஞ்சி ஆண்டவர் கோவில், தர்கா, தேவலாயம் என பல்வேறு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை காண பலர் வருகிறார்க்ள. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்கவே பலரும் வருகிறார்கள். அப்படி வரும் பலர், புகழ் பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்வார்கள். அப்படி செல்லும் பக்தர்களுக்காகவே நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார். இது ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல் மலைப் பிரதேசம் என்பதால், இங்கு உணவகங்களில் உணவின் விலை சற்றுக் கூடுதலாகவே இருக்கும். குறிஞ்சியாண்டவர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவதால், குறைந்த வருமானம் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு உணவுச் செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சொல்வது என்றால், மதிய உணவுக்காக யாரும் ஏங்கத்தேவையில்லை நேராக குறிஞ்சி ஆண்டவரை தரித்துவிட்டு, அப்படியே சாப்பிட்டு வரலாம்.இந்த முயற்சியை பக்தர்கள் வரவேற்கிறார்கள். இதன் காரணமாக குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.
குறிப்பாகப் பண்டிகைக் காலங்கள் அல்லது வார இறுதி நாட்களில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அமைதியான முறையில் அன்னதானம் வழங்குவதும் சற்று சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் இதனை சரியாக செய்தால், பல சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக பக்தர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications