ஆக்குவா மேன்.. மீனாக மாற ஆசையா? தமிழ்நாட்டில் அதையும் செய்யலாம்.. கடலடியில் சுத்தி பார்க்க ரெடியா?
சென்னை: மலைகள், காடுகள், அருவிகள், வயல் வெளிகள் என சுற்றுப்பார்த்த நம் கண்களுக்கு கடலுக்குள் மிதந்து அங்கிருக்கும் பொக்கிஷங்களை பார்வையிட ஆசையா? தமிழ்நாட்டில் அதற்கும் வழி இருக்கிறது. வாருங்கள் இந்த எழுத்துக்களில் மூழ்கி முத்தெடுப்போம்.
குறிஞ்சு, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தினைகளையும் உள்ளடக்கிய பூமி நம் தமிழ்நாடு. காடு, மலை, சமவெளி, விவசாய நிலம், வறண்ட கரிசல் நிலம், கடல் என அனைத்தையும் நம்மில் பலரும் சுற்றுப்பார்த்து இருப்போம். குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், பகுதியை சேர்ந்தவர்களுக்கு கடல்தான் எல்லாமே.

கடலை நோக்கியே அவர்களின் கால்கள் சென்றுகொண்டிருக்கும் அளவுக்கு கடலோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது அவர்களின் வாழ்க்கை. கடலையே வாழ்வாதாரமாக கொண்ட மீனவர்கள் ஒருபக்கம் என்றால், மன அமைதிக்காக மணிக்கணக்கில் கடற்கரை மணலில் அமர்ந்து அலைகளில் கால் நனைத்துக்கொண்டிருக்கும் மக்கள் ஏராளம்.
எவ்வளவு நாட்கள்தான் கடற்கரை மணலிலும், அலையுடனும், படகில் சென்றும் விளையாடுவது? அப்படி அந்த கடலுக்கு உள்ளே என்னதான் இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்ததில்லையா.. அந்த கேள்விக்கான விடை தமிழ்நாட்டிலேயே உள்ளது. ஆம், தமிழ்நாட்டின் பல கடற்கரைகளில் ஸ்கூபா டைவின் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் செய்யும் வசதி இருக்கிறது.

மன்னார் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடா போன்ற் இந்தியாவின் பவளப் பாரைகளின் தாயகமாகும். இப்பகுதிகளில் நீங்கள் மீனாக நினைத்துக்கொண்டு ஆழ்கடல் நீச்சல் அடித்து அதன் கொள்ளை அழகை கண்டுகளிக்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஸ்கூபா டைவிங்கிற்கு சிறந்த இடமாக இருப்பது சென்னை ஈசிஆர்தான். இங்குதான் இரவு நேர ஆழ்கடல் நீச்சலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இரவில் வெளியில் கருப்பாக தெரியும் கடல், உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் இருந்தால் நிச்சயம் நீங்கள் முயற்சிக்கலாம். இரவு நேர ஸ்கூபா டைவிங்கில் கிடைக்கும் இனிய வியப்பூட்டும் அனுபவத்தை இரண்டே வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், "பிரமாண்டத்தின் உச்சம்" எனலாம்.

சூரியம் மறையும்போது நீருக்கு அடியில் இருக்கும் உலகம் வேறு விதமாக மாறும். கடலில் இரவு நேரங்கள் வெளியே வரும் உயிரினங்கள் தரும் ஒளியால் ஏற்படும் நிறமாற்றம் உங்கள் மனதை கொள்ளையடிக்கும் பேரழகாக இருக்கும். நாம் வாழும் உலகம் என்பது பூமியில் 4ல் ஒரு பங்குதான். மீதம் இருக்கும் உலகம்தான் 3 மடங்காகும்.
தோண்ட தோண்ட கிடைக்கும் அற்புதங்களை கொண்ட கடல் உலகின் மர்மமும், விசித்திரங்களும், விநோதங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அதனை அனுபவிக்கும் சுகம் அலாதியானது. தொடக்கத்தில் பயம் தந்தாலும் போகப்போக பரசவ நிலையை அந்த சுகம் ஏற்படுத்திவிடும்.

ஸ்கூபா டைவிங்கை எளிதில் நாம் மேற்கொள்ள முடியாது. சென்னை ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கென முறையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முறையான பயிற்சி, பாதுகாப்பு, வழிகாட்டுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நீங்கள் மீனாக மாறி கடலின் ஆழத்தை அனுபவிக்கலாம்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications