களக்காட்டு தலையணை நீர்வீழ்ச்சியில் அதிகரித்த நீர்வரத்து.. மருத்துவ நீரில் ஆட்டம் போட எப்படி போகலாம்
திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இருக்கும் தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடும்பத்தோடு குளியல் போட்டு கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதற்கு நீங்களும் போக வேண்டுமா அப்போ இதை முழுமையாக படிங்க.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணை நீர்வீழ்ச்சியில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளிர்ச்சியோடு வருவதால் இந்த அருவியில் குளிப்பதற்காக எப்போதுமே சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருவார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்யும் பொழுது இந்த அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக பருவ மழைகளை நம்பியே இந்த அருவி இருந்து வந்தாலும், இங்கே தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியதும் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிடும். குறிப்பாக காலை 10 மணிக்கு மேலே இங்கே மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதுபோல மாலை 5 மணி வரைக்கும் தான் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதுபோல தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் போதும் இங்கே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. அதுபோல தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும் காலங்களிலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும் கோடை கால கட்டங்களில் மலையில் இருக்கும் விலங்குகள் தண்ணீருக்காக இந்த அருவியை நம்பித்தான் வந்து கொண்டிருக்கும். அப்போது விலங்குகளால் மனிதனுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்றும் அதே நேரத்தில் மனிதர்களாலும் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் வனத்துறையினர் இங்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த அருவியில் குளிப்பதற்காக சுற்று வட்டார மக்கள் அனைவரும் தங்களுடைய சொந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர். குறிப்பாக இங்கே இருக்கும் டோல்கேட் அருகில் அனைத்து வாகனங்களும் செக்கப் செய்யப்படும். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள், மதுபான பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள், கத்தி, அரிவாள் போன்ற பொருள்கள் அனுமதி கிடையாது.

மனிதர்கள் கொண்டு செல்லும் பொருள்களால் விலங்குகளுக்கு எந்த பாதிப்பு வந்து விடக்கூடாது என்றும் காட்டில் தீ பரவி விடக்கூடாது என்றும் வனத்துறையினர் பொருட்களை செக்கப் செய்கின்றனர்.இங்கே வருவதற்கு அரசு பேருந்துகள் எதுவும் வசதி கிடையாது. வரும் சுற்றுலா பயணிகள் அவர்களுடைய சொந்த வாகனங்களில் தான் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பயணிகளுக்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் ஒரு வேனுக்கு 100 ரூபாய் மற்றும் கார் மற்றும் பைக்குக்கு 50 ரூபாய் வனத்துறையினரால் வசூலிக்கப்படுகிறது.
அதுபோல இங்கே அரிய வகை சிங்கவால் குரங்குகள் களக்காட்டில் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும் தான் இந்த வகை குரங்குகள் காணப்படுகிறது.அதுபோல இங்கே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியாக உடைமாற்றும் வசதிகளும் இருக்கிறது. சாப்பாடு கொண்டு வரும் மக்கள் இலைகளிலோ அல்லது பாத்திரங்களிலோ கொண்டு வந்து இங்கே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு செல்லலாம்.

குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு இங்கே சாப்பிட்டு விட்டு இங்கு வரும் குரங்குகளுக்கு உணவு பொருட்கள் கொடுத்து வழங்குவதும் பலருடைய பழக்கமாக இருக்கிறது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது ஒரு சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் தண்ணீர் தடுப்பணையை தாண்டி விழுந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். அதுபோல மலைப்பகுதிகளில் திடீர் மழை பெய்வதால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்றும் அதனால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் குளிக்கும் படியும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications