குற்றாலம் போனவர்கள் குதூகலம்... இன்ப அதிர்ச்சி தந்த இயற்கை.. மாறிய வானிலையால் மகிழ்ச்சி
தென்காசி: ஒரு மாத இடைவேளைக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அற்புதமான சுற்றுலா தளம் ஆகும். மலைப்பகுதி என்றாலும், மிக உயரமான மலைப்பகுதியாக இருக்காது. தென்காசியில் இருந்து வெறும் 6 கிலோ மீட்டர் தூரத்தில் குற்றால அருவி இருக்கிறது. குற்றால அருவியை சுற்றியுள்ள ஏராளமான சிறிய அருவிகள் அருகிலேயே உள்ளன. மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலியருவி என அருவிகள் மையமாக குற்றலாம் இருக்கிறது.

இங்கு தென்மேற்கு பருவ மழை காலத்தில் அடிக்கடி மழை விழும். அதன் காரணமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்களில் சீசன் களை கட்டும். எப்போது மழை பெய்யும், எப்போது குளுகுளுவென மாறும் என்றே தெரியாது. அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும்.
குற்றாலத்தின் குளுகுளு கால நிலையை அனுபவிக்க தமிழகம், கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வருவார்கள். மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலியருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

இந்நிலையில் இந்த முறை தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவிலலை. பெரிய அளவில் கைவிட்டுவிட்டது. பருவ நிலை மாற்றத்தால் தென்காசி மாவட்டத்தில் மட்டுமில்லாமல், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் போதிய அளவு பெய்யவில்லை. கடந்த ஒரு மாதமாக சரியான மழை பெய்யவில்லை. இதனால் பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்பட அருவிகளில் நீர் வரத்து வரண்டு காணப்பட்டது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து மிக குறைவாகவே இருந்தது. இதனால் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை சந்தித்தனர். குறைவான தண்ணீரிலேயே குளித்து சென்றனர்.
இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால், குற்றாலம் மலைப்பகுதிகளிலும், ஐந்தருவி மலைப்பகுதிகளிலும் நேற்று மாலை பெய்த திடீர் மலையின் காரணமாக தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து வர தொடங்கி உள்ளது. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவிற்கு குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இன்று குற்றாலம் வந்துள்ளனர். இதனால் மீண்டும் குற்றாலம் சீசன் களை கட்டியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications