கலங்கிப்போன கனிமொழி.. நாங்குநேரி மாணவன் கையை பிடித்து ஆறுதல்.. மருத்துவமனையில் கண்ணீர்!
திருநெல்வேலி: நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு உள்ளான மாணவரை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் வேறு ஒரு சாதியை சேர்ந்த மாணவர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. இதற்கு முன்னரும் சாதிய மோதல் சம்பவங்களில் 12-17 வயது சிறார்கள் ஈடுபட்டிருந்தாலும், அது பள்ளியின் மூலமாக உருவாகி இருக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் முழுக்க முழுக்க பள்ளியிலிருந்துதான் வெடித்து கிளம்பியிருக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளான ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்திருந்தார். இது குறித்து அவரது தாய் விசாரிக்கையில், வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த மாணவனை சாதிய வன்கொடுமை செய்திருந்தது தெரியவந்திருக்கிறது. எனவே இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கையில், எங்கள் மீதே புகார் கொடுக்கிறாயா? என ஆத்திரமடைந்த மற்ற சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவனை வீடு புகுந்து வெட்டி சாய்த்துள்ளனர். இதை கண்டு பதறி தடுக்க வந்த அவரது தங்கையையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதையெல்லாம் பார்த்த இவர்களது தாத்தா சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் உயிரை விட்டிருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறார்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சோகம் என்னவெனில் சம்பவத்தில் ஈடுபட்ட சிறார்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் தாங்கள் செய்தது குறித்து எவ்வித குற்ற உணர்வும் இன்றி ஜாலியாக இருந்திருக்கின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கான சிகிச்சை செலவு, கல்வி செலவு என அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தது. அதேபோல அமைச்சர் மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனையும், அவரது சகோதரியையும் இன்று நேரில் சந்தித்து இந்த துயரத்திலிருந்து மீண்டு வர அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆறுதல் கூறியுள்ளார்.
-
இதையா கொடுத்தாங்க? தாம்பூலப் பையை திறந்து பார்த்த உறவினர்கள் ஷாக்! திருநெல்வேலியில் அந்த சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications