Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்சம் வாங்க வீட்டுக்கே போன நகராட்சி ஊழியர்.. சொத்து வரிக்கு அப்ளை செய்த தென்காசி நபர் கொடுத்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார். புது வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில் அதனை கொடுக்க விரும்பாத நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி ஊழியரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி குற்றமாகும். ஆனாலும் தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஒரு சிலர் லஞ்சம் கேட்டு அடிக்கடி போலீசில் கைதாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பின்பும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

puliyangudi-municipality-employee-in-tenkasi-district-arrested-for-accepting-bribe-to-assess-propert

ரூ.15 ஆயிரம் லஞ்சம்

அந்த வகையில் நேற்று தென்காசி புளியங்குடி அருகே புதிய வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:- தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தெற்கு சத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 36). இவர் புளியங்குடி அருகே சிவராமு நாடார் 7 ஆம் தெருவில் புதியதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.

வீடு கட்டும் பணிகள் முடிந்த நிலையில், வீட்டுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்ய விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர் காளிராஜனின் புதிய வீட்டினை அளவீடு செய்தவற்காக வந்துள்ளார். வீட்டை அளவீடு செய்துவிட்டு காளிராஜனை அலுவலகம் வருமாறு கூறிவிட்டு சென்றார்.

அதன்பேரில் நேற்று முன் தினம் அலுவலகம் சென்ற காளிராஜனிடம், புதிய வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்து சான்றிதழ் தர வேண்டுமெனில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என காளிராஜன் கூறியிருக்கிறார். இதையடுத்து 15 ஆயிரமாவது கொடுத்தால் தான் சான்றிதழ் தருவதாக அகமது உமர் கூறினார். இதையடுத்து சரி என சொல்லிவிட்டு காளிராஜன் அங்கிருந்து கிளம்பினார்.

கையும், களவுமாக சிக்கினார்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் காளிராஜனிடம் ஒரு யோசனை சொல்லியுள்ளனர். அதன்பேரில் நேற்று அகமது உமர் வீட்டில் வந்து பணத்தை வாங்கிக் கொள்வதாக கூறியிருந்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை காளிராஜனிடம் கொடுத்தனர்.

இதையடுத்து நேற்று மீண்டும் வீட்டை அளப்பதாக கூறி வீட்டுக்கு வந்த நகராட்சி வருவாய் உதவியாளர் காளிராஜனிடம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து காளிராஜன் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயன தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை பெற்ற போது, அதனை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த அதிகாரிகள் அகமது உமரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் சென்று சோதனை நடத்தினர். சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+