Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலியில் இவ்வளவு சுற்றுலா இடங்கள் இருக்கா! குற்றாலமெல்லாம் இருக்கட்டும்! இப்போ ட்ரெண்டே வேற

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆனால் வழக்கமாக செல்லும் இடங்களைவிட அறியப்படாத இடங்களுக்கு சுற்றுலா செல்வது சிறந்த அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில் திருநெல்வேலியில் அறியப்படாத இடங்கள் பல இருக்கின்றன.

வழக்கமாக திருநெல்வேலி என்றால் குற்றாலமும், நெல்லை கோயிலும்தான் நம் நினைவுக்கு வரும் ஆனால், அதைவிட வேறு சில சிறப்புமிக்க இடங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன. அதில் முதலாவது அரியகுளம் பறவைகள் சரணாலயம். இந்த பூமியில் எல்லை வகுத்து சுருக்கிக்கொள்வதை போல பறவைகள் தங்களுக்கு எல்லைகளை வகுத்துக்கொள்வதில்லை. இப்படிப்பட்ட பறவைகள் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வலசைக்கு வருகின்றன.

Tour: Unmissable Tourist Places in Tirunelveli

அப்படி வரும் பறவைகள் தமிழ்நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில் சில நாட்கள் வரை தங்குகின்றன. அப்படி பறவைகள் தங்க தேர்ந்தெடுத்துள்ள இடம்தான் அரியகுளம் பகுதி. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பகுதியில் அமைந்து இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஸ்பாட் டவ், க்ரீன் சாண்ட்பைப்பர், பிளாக் விங்கிடு ஸ்டில்ட் மற்றும் காமன் கூட் போன்ற அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. அதேபோல கூந்தங்குளம் பறவைகள் சரணாலயமும் தவறவிடக்கூடாத மற்றொரு இடமாகும்.

Tour: Unmissable Tourist Places in Tirunelveli

அதேபோல முக்கியமாக பார்க்க வேண்டிய மற்றொரு இடம் மாஞ்சோலை. இந்த இடம் அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையின் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் எல்லை பகுதயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தேயிலைக்கு பிரசித்தி பெற்ற இடம் எனில் அனைவருக்கும் ஊட்டிதான் தெரியும். ஆனால் இந்த மாஞ்சோலையில் விளையும் தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தரமானதாகும். அதேபோல இந்த பகுதியில் குதிரைவெட்டி, காக்காச்சி, ஊத்து, கோதையாறு உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.

இந்த வரிசையில் தவற விடக்கூடாத மற்றொரு இடம் அகத்தியர் அருவி. திருநெல்வேலி நகரிலிருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அகத்தியர் அருவியில் ஆண்டின் அனைத்து நாட்களிலும் நீர் வரத்து இருக்கும். எனவே எப்போது போனாலும் இங்கு குளிக்கலாம். இந்த அருவியின் மேல் பகுதியில் அகத்தியருக்கு கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த பகுதியில் சொறிமுத்து அய்யனார் கோயிலும் இருக்கிறது. இது தவிர ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் அதாவது தென்காசியில் பண்பொழி எனும் ஊர் இருக்கிறது.

Tour: Unmissable Tourist Places in Tirunelveli

இங்குள்ள திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பொதிகை மலையின் இயற்கை அழகை ரசிக்க வேண்டும். ஆனால் மலையேறி செல்ல முடியாது என்று நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு வரலாம். இந்த கோயிலும் ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருக்கிறது. ஆனாலும் இந்த குன்றில் ஏறுவதற்கு முறையாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே சிரமில்லாமல் ஏறலாம். இந்த கோயிலுக்கு என அமைந்துள்ள குளமும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த குளத்தில் சங்க காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குவளை மலர் இன்றளவிலும் பூத்து குலுங்குகிறது.

Tour: Unmissable Tourist Places in Tirunelveli

நெல்லை போனால் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் சுத்தமல்லி அணைக்கட்டு. நெல்லையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டு குளிப்பதற்கு மிகவும் ரம்யமான இடமாக இருக்கிறது. இதேபோல அத்திரி மலையும் அதிகம் கவனம் பெறாத சிறப்புமிக்க இடமாகும். நெல்லையிலிருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் அமைந்து இந்த அத்திரி மலையில் அத்திரி மகரிஷி - அனுசுயா தேவி திருக்கோவில் அமைந்திருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோயிலை சுற்றி அரிய மூலிகை செடிகள் பல இருப்பதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+