நம்ம மதுரை வைகை ஆற்றின் பிறப்பிடத்தை பார்த்திருக்கீங்களா? புலிகள் சரணாலயமான வருசநாடு! சொர்க்க பூமி!
சென்னை: தமிழகம் கேரளா எல்லையில் இருந்த வைகையோட பிறப்பிடம் எங்கிருக்கிறது தெரியுமா? அடர்ந்த காட்டுப் பகுதியில்தான்! அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
இதுகுறித்து மேகமலைக்காதலன் என்ற எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வாழ்க்கைல நீண்ட நாள் கனவு ஒன்னு எல்லாருக்கும் இருக்கும் அப்படி ஒரு கனவு தான் எனக்கு வைகை ஆத்தோட மூலத்த பாக்கணும்னு. அப்பிடி ஒரு interesting ட்ரிப் பத்தி தான் நான் இன்னிக்கி உங்ககிட்ட ஷேர் பண்றேன். வைகையோட பிறப்பிடம்னு சொல்ற வருசநாடு வெள்ளிமலைக்கு போனது.

நான் போனது 2018 வருஷம் ஜூலை மாசத்துல. அப்பத்தான் மழை ஆரம்பிச்சு இருந்தது. நம்ம ஒரு forest க்குள்ள போறதுக்கு, முன்னாடியே permission லெட்டர் வாங்கணும். அப்போ அது reserve forest தான். அந்த லெட்டர் காமிச்சா தான் மஞ்சனூத்து செக் போஸ்ட்ல விடுவாங்க.
Place : varushanadu, kadamalaikundu
இப்போ யாரும் போக முடியாது ஏன்னா புலிகள் சரணாலயமா ஆக்கிட்டாங்க. அந்த செக் போஸ்ட் தாண்டி உள்ள போன கொஞ்ச தூரம் முழுசா காடு. சின்ன சின்ன கிராமம வருது , அரசரடி, பொம்மராஜபுரம், இந்திரா நகர் அப்பிடின்னு. காட்டுக்குள்ள 1960ல அரசாங்கமே விவசாயம் பண்றதுக்கு மக்களை குடி அமைத்திருக்காங்க.

அங்க அங்க ஏலக்காய், இலவம்பஞ்சு விவசாயம் பண்ணாங்க. அதெல்லாம் தாண்டி போனா நல்ல காடு, வருஷத்துல ஒன்பது மாசம் அங்க மழை பெய்யுமாம். காட்டுக்குள்ள சலசலத்து வைகை ஆறு ஓடுது. தண்ணி பாத்தீங்கன்னா அவ்ளோ சுத்தம். நம்ம மதுரைல ஓடற வைகையா இதுன்னு ஆச்சரிய பட்டு போவீங்க.
போற வழில நிறைய வனவிலங்குகளை சர்வ சாதாரணமா பாக்கலாம். குறிப்பாக யானை நிறைய பாக்கலாம், அப்புறம் மான் முயல் கருமந்தி ( lion tailed macaque). இந்த இடத்தோட end point அப்பிடின்னா வெள்ளிமலை முருகன் கோவில். காட்டுக்குள்ள அப்படி ஒரு அழகான முருகன் கோவில். எஸ்டேட்ல வேல பாக்குறவங்களுக்கு கட்டுனது. அந்த கோவில் பக்கத்துல தான் வைகையோட மூல ஸ்தானம் இருக்கு.

வைகை உற்பத்தி ஆகி வர்ற இடத்தை பாத்த ஒரு சந்தோஷம் இருக்கே அத வார்த்தையால சொல்ல முடியாது. வாழ்க்கைல கடவுள் எவ்வளவோ கஷ்டம் குடுத்தாலும் இந்த மாதிரி இடங்களுக்கு போறப்ப கிடைக்கிற மன அமைதி கோடி ரூபா குடுத்தாலும் வரவே வராது. இவ்வாறு மேகமலைக் காதலன் என்ற நெட்டிசன், தனது பயணத்தை வீடியோ, புகைப்படங்களாக பதிவிட்டுள்ளார்.
இந்த வருசநாடு, மலைகுண்டு- மயிலாடும்பாறை இடையே உள்ளது. இது தமிழக- கேரள எல்லையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி. இது மேகமலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications