ராகுல் காந்தி முன்பு மோடி, கேஜ்ரிவால் எல்லாம் சும்மா... லாலு
முசாபர்நகர்: ராகுல் காந்தி முன்பு நரேந்திர மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோரெல்லாம் ஒன்றுமே கிடையாது என்று ராகுல் புகழ் பாடியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.
உ.பியில் மதக் கலவரம் நடந்த முசாபர்நகர் மாவட்டத்திற்குச் சென்றார் லாலு பிரசாத். அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் முஸ்லீம் சமுதாயத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜகவும், சமாஜ்வாடிக் கட்சியும் நடந்து வருகின்றன. இவர்களே முசாபர்நகர் கலவரங்களுக்குப் பொறுப்பு.
நரேந்திர மோடி, கேஜ்ரிவால் குறித்து தேவையில்லாமல் புகழ்ந்து பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்திக்கு முன்பு இவர்கள் ஒன்றுமே இல்லாதவர்கள். பூஜ்யங்கள்.
ராகுல் காந்தி எப்போதுமே ராகுல் காந்திதான். மீடியாக்கள்தான் மோடி, கேஜ்ரிவாலை தூக்கி நிலாவில் வைத்து உயர்த்திப் பேசி வருகின்றன என்று சாடினார் லாலு.












Click it and Unblock the Notifications