இதே விஜயதசமி நாளில்..96 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்...3 முறை தடை..கடந்து வந்த பாதை

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: 1925-ம் ஆண்டு இதே நாளில்தான் ராஷ்டிரிய ஸ்வயம் ஸேவக் என்கிற இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. கடந்த 96 ஆண்டுகால வரலாற்றில் நாடு விடுதலைக்குப் பின்னர் 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 96 ஆண்டுகால சுருக்கமான வரலாறு:

Vijayadashmi: 96 year Journey of Rashtriya Swayamsevak Sangh

- 1925-ல் தசரா அல்லது விஜயதசமி நாளில் கேசவ பலிராம் ஹெட்கேவரால் 20 இளைஞர்களுடன் தொடங்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.

- 1926-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் தான் ராஷ்டிரிய ஸ்வயம் ஸேவக்- ஆர்.எஸ்.எஸ். என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டது.

- 1926-ம் ஆண்டு மே 28-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதல் சாகா அல்லது பயிற்சி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதல் சாகா அல்லது பயிற்சி அணிவகுப்பு நாக்பூரில் நடைபெற்றது. இந்த இடத்தில்தான் தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ளது.

- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதல் குரு ஹெட்கேவர். ஆனால் ஹெட்கேவரோ, தமது குரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் காவி கொடிதான் என அறிவித்தார்.

- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆண்டுதோறும் 6 முக்கிய விழாக்களை நடத்துகிறது. இதில் ஒன்று வியாஸ் பூர்ணிமா நாளில் இயக்கத்தின் காவி கொடிக்கு நடத்தப்படும் குரு பூஜை. 1928-ல் முதன் முதலாக இந்த குரு பூஜை நடத்தப்பட்டது.

- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியர்கள் பிரசாரக் என அழைக்கப்பட்டனர். தற்போது 4,000 பிரசாரகர்கள் இந்த அமைப்பில் உள்ளனர்.

- 1929-ம் ஆண்டு மே 1 முதல் ஜுன் 10 வரை மொத்தம் 40 நாட்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் இயக்க தொண்டர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

- 1939-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாக்பூர் அருகே சிந்தியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்தில் மராத்தி, ஆங்கிலத்துக்கு பதில் சமஸ்கிருதத்தை தங்களது இயக்கத்தின் கட்டமைப்புக்கான மொழியாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். இறைவணக்கமும் சமஸ்கிருதத்திலேயே பாடும் முறையும் தொடங்கியது.

- 1940-ல் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் காலமானார். அவரைத் தொடர்ந்து எம்.எஸ். கோல்வாகர் அந்த இயக்கத்தின் தலைவாரானார். இந்த அமைப்பின் தலைவராக 33 ஆண்டுகாலம் கோல்வாகர் பணியாற்றினார்.

- 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட்டது. இது ஆர்.எஸ்.எஸ். மீதான மத்திய அரசின் முதல் தடை.

- 1952-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு பிரிவாக பாரதிய ஜனத சங் தொடங்கப்பட்டது. பாஜகவின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜியால் இது தொடங்கப்பட்டது. இதுவே பின்னாளில் ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சி என உருமாறியது.

- 1975-ம் ஆண்டில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்செய்யப்பட்ட போது 2-வது முறையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது.

- 1983-ம் ஆண்டில் ராமஜென்மபூமி இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்தது. ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் இதைத் தீவிரமாக முன்னெடுத்தது.

- 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3-வது முறையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது.

- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது 3 முறை தடை விதிக்கப்பட்டாலும் இந்த தடை குறுகிய காலமே அமலில் இருந்தது.

- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களை செயல்படுத்தும் அரசியல் கட்சியான பா.ஜ.க. 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+