சென்னைக்கு அடுத்த 12 மணி நேரம் ரொம்ப கிரிடிக்கல்! 3 மாவட்டங்களுக்கு சம்பவம்.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதாவது நாளை காலை 8 மணி வரை சென்னை உட்பட 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை போதுமான அளவுக்கு மழை பொழிவை கொடுத்தது. இதனை தொடர்ந்து தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 6 சதவிகிதம் குறைவாகவே பெய்திருக்கிறது. இந்நிலையில் இதனை ஈடு செய்யும் விதமாக தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடங்கியது. இன்று மிக்ஜாம் புயலாக உருவெடுத்திருக்கிறது.

இந்த புயல் டிச.5ம் தேதி சென்னைக்கு அருகே, தெற்கு ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தீவர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு யைம் எச்சரித்திருக்கிறது. இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்(ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை மணிக்கு, 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் தற்போது புதிய அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அதாவது இன்று இரவு 8 மணியில் இருந்து நாளை காலை 8.30 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையிலும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications