கேப் விடாமல் கொட்டும் மழை! அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 18 மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை போதியளவு மழையைத் தரவில்லை. தென்கிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதல் நல்ல மழை பெய்து வருகிறது.

 18 districts like Chennai, Chengalpattu will receive rain for next 3 hours on November 27

அதிலும் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் இந்த மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களுடன் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் நீர் தேங்கும் அபாயமும் இருக்கிறது. டிராபிக் நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நாளை (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அப்படி நடந்தால் அது தமிழகத்திற்குப் பரவலாக மழையை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "இன்று (நவ. 26) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல நாளை நவ. 27ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+