இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் லேசான மழை.. மற்றபடி தமிழகம் முழுவதும் வெப்ப அலைதான்! வெதர் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் வரும் மே மாதம் 1ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று கூறி மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது.
அதாவது, "தமிழகத்தில் மே மாதம் 1ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும். அதேபோல, தென் மாவட்டங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மற்றபடி அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 4 நாட்களுக்கும் வானிலை இப்படித்தான் இருக்கும். 5வது நாள், அதாவது மே 2ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும். இதே வட உள் மாவட்டங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். அதாவது உள் மாவட்டங்களில் 102-109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும். மற்ற பகுதிகளில் 95-102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்.
வெப்ப அலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஏப்.30ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக வெப்ப அலை வீசும். எனவே வெப்ப அலை குறித்து மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மே.1ம் தேதி தமிழகத்தின் வட உள் மாவட்டங்களுக்கு வெப்ப அலை குறித்து ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி ஃபாரன்ஹீட் அளவும், அதற்கடுத்தபடியாக சேலத்தில் 107.42, திருப்பத்தூரில் 107.24 என வெயில் வாட்டி எடுத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக கரூர் பரமத்தியில் 106.7, திருத்தணியில் 106.16, வேலூரில் 105.98, நாமக்கல்லில் 104, திருச்சியில் 103.46 என வெயில் பதிவாகியுள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது.
கடந்த ஆண்டுதான் எல்-நினோ முடிவுக்கு வந்திருக்கிறது என்பதாலும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு தீவிரமாக இருக்கிறது. பருவமழை இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் தலை காட்டும் என்று வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications