இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் லேசான மழை.. மற்றபடி தமிழகம் முழுவதும் வெப்ப அலைதான்! வெதர் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் வரும் மே மாதம் 1ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று கூறி மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது.
அதாவது, "தமிழகத்தில் மே மாதம் 1ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும். அதேபோல, தென் மாவட்டங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மற்றபடி அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 4 நாட்களுக்கும் வானிலை இப்படித்தான் இருக்கும். 5வது நாள், அதாவது மே 2ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும். இதே வட உள் மாவட்டங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். அதாவது உள் மாவட்டங்களில் 102-109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும். மற்ற பகுதிகளில் 95-102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்.
வெப்ப அலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஏப்.30ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக வெப்ப அலை வீசும். எனவே வெப்ப அலை குறித்து மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மே.1ம் தேதி தமிழகத்தின் வட உள் மாவட்டங்களுக்கு வெப்ப அலை குறித்து ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி ஃபாரன்ஹீட் அளவும், அதற்கடுத்தபடியாக சேலத்தில் 107.42, திருப்பத்தூரில் 107.24 என வெயில் வாட்டி எடுத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக கரூர் பரமத்தியில் 106.7, திருத்தணியில் 106.16, வேலூரில் 105.98, நாமக்கல்லில் 104, திருச்சியில் 103.46 என வெயில் பதிவாகியுள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது.
கடந்த ஆண்டுதான் எல்-நினோ முடிவுக்கு வந்திருக்கிறது என்பதாலும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு தீவிரமாக இருக்கிறது. பருவமழை இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் தலை காட்டும் என்று வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications